சட்டவிரோத லாட்டரி விற்பனையில் ஈடுபடுமாறு திமுக அழுத்தம் கொடுத்ததாக லட்சிய ஜனநாயகக் கட்சித் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் செய்தியாளருடன் ஜோஸ் சார்லஸ் மார்டின் பேசுகையில், "திமுகவின் கடினமான காலங்களில் என் தந்தை, நட்புறவின் காரணமாக கருணாநிதிக்கு ரூ. 500 கோடி நன்கொடை அளித்தார்.
பின்னர், லாட்டரிகளுக்கு சட்டபூர்வமான நாங்கள் அனுமதி கோரியபோது, அதில் திமுக ஆர்வம் காட்டவில்லை. ஆனால், இது 10 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவளிப்பது மட்டுமின்றி, மாநிலத்துக்கு சுமார் ரூ. 7,000 கோடி ஜிஎஸ்டி வருவாயை ஈட்டித் தந்திருக்கும்.
சட்டபூர்வ அனுமதிக்குப் பதிலாக, சட்டவிரோதமாக விற்பனை செய்யுமாறு எங்களுக்கு அழுத்தம் கொடுத்தனர். இருப்பினும், அதற்கு நாங்கள் மறுப்பு தெரிவித்து விட்டோம்.
ஏனெனில், ஒருபோதும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்று தொடக்கத்திலிருந்தே நாங்கள் தெளிவாக உள்ளோம்" என்று தெரிவித்தார்.
Summary
DMK Pressured to Engage in Illegal Lottery Sales: LJK Party Leader Jose Charles Martin
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










