சென்னையில் நடிகை சிம்ரன் தனது வாக்கை பதிவு செய்தார்.
தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்பட பொதுமக்கள் அனைவரும் காலைமுதல் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், வாக்களித்த புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் வெளியிட்ட நடிகை சிம்ரன், அனைவரும் அவர்களின் வாக்குகளைப் பதிவு செய்ய வலியுறுத்தியுள்ளார்.
மேலும், அவர் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
“நாடகங்களைத் தவிர்த்து, எதார்த்தத்தில் கவனம் செலுத்துவோம். இது வாக்குச்சாவடி, சினிமா படப்பிடிப்பு அல்ல. வாக்களிக்கும்போது நாம் அனைவரும் சமமே. வாக்களிப்பது என் உரிமை மட்டுமல்ல, அது என் பொறுப்பும் கூட” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Summary
it’s a voting booth not a cinema shoot - actress simran
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.











