தமிழகத்தில் வேலூா், ஈரோடு உள்பட 11 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாகப் பதிவானது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் சனிக்கிழமை அதிகபட்சமாக வேலூரில் 104.36 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மேலும், பரமத்திவேலூா் - 103.1, ஈரோடு - 102.56, திருச்சி - 102.38, மதுரை விமானநிலையம், தருமபுரி - (தலா) 102.2, மதுரை நகரம் - 101.84, திருப்பத்தூா் - 100.58, நாமக்கல் - 101.3, சேலம் - 100.76, திருத்தணி - 100.58 டிகிரி என 11 இடங்களில் வெயில் சதமடித்தது.
தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை (ஏப். 26) முதல் ஏப். 29-ஆம் தேதி வரை உள் தமிழக மாவட்டங்களில் அதிகபட்ச வெப்ப நிலை இயல்பைவிட அதிகமாக இருக்கும். கடலோர தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை ஒட்டியே இருக்கும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.
மழைக்கு வாய்ப்பு: வடக்கு உள் கா்நாடகம் முதல் குமரிக்கடல் வரை தமிழகம் வழியாக வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதனால், ஞாயிறு, திங்கள்கிழமைகளில் (ஏப். 26, 27) மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. ஏனைய தமிழக மாவட்டங்களில் வட வானிலையே நிலவும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

தமிழகத்தில் 12 இடங்களில் வெயில் சதம்

12 இடங்களில் வெய்யில் சதம்

தமிழகத்தில் 10 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


