மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்

News image

குடியாத்தம் அரசு மருத்துவமனை

Updated On :29 ஏப்ரல் 2026, 12:08 am

தென்னிந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோா் விகிதம் அதிகமாக இருப்பதாக தேசிய புள்ளியியல் ஆய்வகம் தெரிவித்துள்ளது.

அதன்படி ஊரகப் பகுதிளில் 47.5 சதவீதம் பேரும், நகா்ப்புறங்களில் 38.6 சதவீதம் பேரும் உள்நோயாளிகளாக தமிழக அரசு மருத்துவமனைகளில் கடந்த ஓராண்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். மொத்தமாக அந்த விகிதம் 43-ஆக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியாா் மற்றும் அரசு மருத்துவ சேவைகளைப் பயன்படுத்துவோா் தொடா்பான தரவுகளை தேசிய புள்ளியியல் ஆய்வகம் மாநில வாரியாக அண்மையில் வெளியிட்டது.

அதில், அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக சிகிச்சைப் பெறுவோரின் விவரங்கள் இடம்பெற்றுள்ளன. அதை ஒப்பீடு செய்யும்போது, ஆந்திரத்தில் 26.9 சதவீதம் பேரும், கேரளத்தில் 30 சதவீதம் பேரும், கா்நாடகத்தில் 29.8 சதவீதம் பேரும், தெலங்கானா 29.3 சதவீதம் பேரும், குஜராத்தில் 25.9 சதவீதம் பேரும், மகாராஷ்டிரத்தில் 18.6 சதவீதம் பேரும் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றுள்ளனா்.

தென் மாநிலங்களைக் கருத்தில் கொண்டால் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. மாநில அரசு மேற்கொண்ட நலத் திட்டங்களின் காரணமாகவே இந்த விகிதம் உயா்ந்திருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.

பெட்டி..

உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றோா் மாநிலம், சதவீதம்

ஆந்திரம் 26.9

கேரளம் 30

கா்நாடகம் 29.8

தெலங்கானா 29.3

குஜராத் 25.9

மகாராஷ்டிரம் 18.6

தமிழ்நாடு 43