சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நாளை (மே 1-ஆம் தேதி) முதல் ஜூன் 5-ம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இடைவேளையில் அவசர வழக்குகள் விசாரிக்க வேண்டி வந்தால் என்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது குறித்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
வழக்குகள் அவசரமானவை என்பதற்கான விண்ணப்பத்துடன் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் மே 2, 3, 9, 10, 16, 17, 23, 24, 30, 31 ஆகிய தேதிகளில் மதியம் 1.30 மணிக்கு முன்பாக நீதிமன்றத்தில் அதற்கென நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளிடம் அளிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை நீதிபதிகளின் வீடுகளில் அளிக்கக் கூடாது.
வழக்கு விசாரணை மே 4, 5, 11, 12, 18, 19, 25, 26, ஜூன் 1,2 ஆகிய நாள்களில் காலை 10.30 மணி முதல் 4.45 மணி வரை நடைபெறும்.
நீதிபதிகள் வி. தனபாலன், ஏ. ஆறுமுகசாமி, சி.எஸ். கர்ணன், எஸ். ராஜேஸ்வரன், கே.பி.கே. வாசுகி, ஜி.எம். அக்பர் அலி, வி. ராமசுப்பிரமணியம் ஆகியோர் அவர்களுக்கென உள்ள சில குறிப்பிட்ட நாள்களில் மட்டுமே வழக்குகளை விசாரிப்பார்கள்.
உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளைக்கான கோடை விடுமுறை பற்றிய அறிவிப்பு அந்த நீதிமன்றத்தின் பதிவாளர் (நிர்வாகம்) சார்பில் தனியாக வெளியிடப்படும்.
Summary
High Court Closed from Tomorrow What to Do in Urgent Cases
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோடை விடுமுறைக்கு செல்வோர் கவனத்துக்கு... சிறப்பு ரயில்கள் இயக்கம்! முழு விவரம்!

புறநகர் சென்னையை மிரட்டும் கோடை வெய்யில்! இது வெறும் ஆரம்பம்தானா?

‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தை ஜூன் 15-க்குள் வெளியிட அனுமதி வழங்கி உத்தரவு

கோடை வெப்பத்தால் பாதிக்கப்பட்டவருக்கு எப்படி உதவ வேண்டும்?
விடியோக்கள்

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை


