FOLLOW US

ON GOOGLE DISCOVER

நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்! பாஜக மட்டும் எதிர்ப்பு!கர்நாடகத்துடன் முதல்வர் விஜய் பேச்சுவார்த்தை நடத்துவது நல்லதல்ல! ஓபிஎஸ் பேச்சுமுதல்வர் தலைமையில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை ஏற்ற மாணவர்கள்!சென்னையில் இன்று முதல் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி முகாம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2400 உயர்வுதமிழ் மீதான தாக்குதல்.. அமைச்சர் மரிய வில்சன் மன்னிப்புக் கேட்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்எம்.எட். சோ்க்கை: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!
/

மின்வாரிய இணையதளம் மீண்டும் செயல்பட தொடங்கியது!

மின்வாரிய இணையதளம் மீண்டும் செயல்பட தொடங்கியது குறித்து...

News image

மின்வாரிய இணையதளம் மீண்டும் செயல்பட தொடங்கியது! - கோப்புப் படம்

Updated On :11 ஆகஸ்ட் 2026, 1:11 pm IST

தமிழ்நாடு மின்வாரியத்தின் இணையதள சேவைகள் திங்கள்கிழமை(ஆக. 10) மாலை முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை முடங்கியிருந்த நிலையில், காலை 11.40 மணி முதல் செயல்பட தொடங்கியது!

தமிழகத்தில் மின்வாரிய இணையதளத்தின் மூலம்தான் புதிய மின்இணைப்பு, மின் இணைப்புபெயர் மாற்றம், வீதப்பட்டி மாற்றம், கட்டடப் பணிக்கான தற்காலிக மின்னிணைப்பு, விவசாய மின்இணைப்பு உள்ளிட்டவைகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

ஆனால் கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி மின்வாரிய இணையதளம் முடங்கி விடுகிறது. இந்நிலையில், திங்கள்கிழமை (ஆக.10) மாலை 4 மணி முதல் செவ்வாய்க்கிழமை காலை 11.40 வரையிலும் இணையதள சேவைகள் முடங்கின.

இதனால் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகினர். இந்நிலையில், காலை 11.40.க்குப் பின் வழக்கம் போல செயல்படத் தொடங்கின. ஆனாலும் இடையிடையே சேவை முடங்கியது. பகல் 12.15.க்குப் பின் தொடர்ந்து வழக்கம்போல செயல்பட தொடங்கியது.

மின்வாரிய சேவைகள் முடங்காத வகையில், அதன் சர்வர் திறனை அதிகரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மின்வாரிய இணையதளம் முடங்கியது குறித்து தினமணி இணையதளத்தில் செய்தி வெளியான சில நிமிடங்களில் முடங்கிய மின்வாரிய இணையதளம் வழக்கம் போல செயல்பட தொடங்கியது.

Summary

After being down from Monday evening (Aug. 10) until Tuesday morning, the Tamil Nadu Electricity Board's online services resumed operations at 11:40 AM.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.