காவிரியில் இருந்து நிலுவையில் உள்ள நீரையும் திறக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு புதிய மனு ஒன்றை அளித்துள்ளது.
கடந்த ஆக. 11 ஆம் தேதி நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில், காவிரியில் இருந்து தினமும் 1 டிஎம்சி வீதம் 15 நாள்களுக்கு நீர் திறக்க கர்நாடக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்திலும் இந்த பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்டு தினமும் 1 டிஎம்சி வீதம் (12,000 கன அடி வீதம்) 15 நாள்களுக்கு நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.
எனினும் நிலுவையில் உள்ள நீர் மற்றும் மாதாந்திர அடிப்படையிலான நீர் என மொத்தம் 36.63 டிஎம்சி நீரைத் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு புதிய மனு ஒன்றை அளித்துள்ளது.
ஏற்கனவே உள்ள பற்றாக்குறை நீரை கணக்கில் கொண்டும், தற்போது விகிதாச்சார அடிப்படையிலும் 21,413 கன அடி வீதம் தண்ணீர் திறக்க உத்தரவிட்டால் மொத்தம் 36.63 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருகிற ஆக. 31 ஆம் தேதிக்குள் இந்த கூடுதல் நீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
இது உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
Tamil Nadu government moves Supreme Court seeking release of additional water from the Cauvery
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசு

காவிரி நீர் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு!

காவிரியில் நீர் பெற உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு; தாமதமாக எடுக்கப்பட்டாலும் சரியான நடவடிக்கை!- அன்புமணி

எ.வ. வேலுவுக்கு எதிரான லுக்-அவுட் நோட்டீஸுக்கு தடை! உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!
விடியோக்கள்

இலங்கை டெஸ்ட் தொடர்: இந்திய அணியின் முன் இருக்கும் WTC சவால்! | Gambhir | IND vs SL |




