ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வுஎம்.எல்.ஏக்களுக்கு அரசு சார்பில் கார்: முதல்வர் விஜய் அறிவிப்புரூ. 300 கோடியில் பெரம்பூரில் பன்னோக்கு மருத்துவமனை: முதல்வர் விஜய் அறிவிப்பு! முதல்வர் காப்பீட்டுத் தொகை ரூ.25 லட்சமாக உயர்வு: முதல்வர்‘ஆளுங்கட்சி என்ற அதிகார போதையில்..’ தவெகவினருக்கு அண்ணாமலை எச்சரிக்கை!அமைச்சரவை மாற்றத்துக்கு ஆயத்தமாகிறது மோடி அரசு!சென்னையில் நாளை தென் மாநில முதல்வா்கள் மாநாடு! அமித் ஷா இன்று வருகைபத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: விடைத்தாள் நகல் இன்று வெளியீடுசெங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா்: இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசெப். 1 முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கைப்பேசிகள் எடுத்துச் செல்ல தடை
/

ரூ. 300 கோடியில் பெரம்பூரில் பன்னோக்கு மருத்துவமனை: முதல்வர் விஜய் அறிவிப்பு!

பெரம்பூரில் ரூ. 300 கோடியில் உலகத்தர பன்னோக்கு மருத்துவமனை அமைக்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளதைப் பற்றி...

News image

முதல்வர் விஜய். - (கோப்புப் படம்)

Updated On :19 ஆகஸ்ட் 2026, 10:25 am IST

சென்னை பெரம்பூரில் ரூ. 300 கோடியில் உலகத்தர பன்னோக்கு மருத்துவமனை அமைக்கப்படும் என்று முதல்வர் சி. ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு பட்ஜெட் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கடந்த ஆக. 5-ஆம் தேதி தொடங்கியது. இந்த நிலையில், விதி எண் 110-ன்கீழ் முதல்வர் விஜய் இன்று காலை (ஆக. 19) சட்டப்பேரவையில் பேசினார்.

முதல்வர் விஜய்யின் சொந்தத் தொகுதியான பெரம்பூர் தொகுதியில் ரூ. 300 கோடியில் உலகத்தரத்திலான மருத்துவமனை அமைக்கப்பட்டும் என்று தெரிவித்தார்.

அவர் பேசுகையில், “ஒரு உயிரின் மதிப்பை அவரது வருமானம் தீர்மானிக்கக் கூடாது. வசதி படைத்தவர், வசதி குறைவானவர் என்ற நிலை மருத்துவத் துறையில் இருக்கக் கூடாது.

அனைவருக்கும் சமமான மருத்துவ சேவை எளிதாகக் கிடைக்க வேண்டும் என்பதில் நமது அரசு உறுதியாக உள்ளது. மருத்துவம் என்பது சலுகை அல்ல; அது ஒரு மனிதனின் அடிப்படை உரிமை.

ஒரு மனிதனின் உயிரைக் காப்பாற்றுவதில் தாமதமாகும் ஒவ்வொரு நொடியும் மிகக் கொடியது. மருத்துவத்தைத் தேடி வரும் மக்களின் பாதையில் இருக்கும் தடைகளான வறுமை, தொலைவு, மருத்துவர் பற்றாக்குறை, மருந்துகளின் விலை, மருத்துவ விழிப்புணர்வு இல்லாமை, காத்திருப்பு, அவசரகால வசதியின்மை போன்றவற்றை படிப்படியாக அகற்றி; ஏழை - பணக்காரர், கிராமம் – நகரம் என்ற பாகுபாடின்றி ஒவ்வொருவருக்கும் தரமான மற்றும் எளிதான மருத்துவ சேவை கிடைப்பதை உறுதி செய்வதையே முதன்மையான நோக்கமாகக் கொண்டு நமது அரசு செயல்பட்டு வருகிறது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் சில அறிவிப்புகளைச் சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் இன்று வெளியிட விரும்புகிறேன். வடசென்னை மக்களுக்கு உயர்தர மருத்துவ சேவை எளிதில் கிடைக்கும் வகையில், பெரம்பூரில் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் 400 படுக்கைகள் கொண்ட பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும்” என்றார்.

Summary

Chief Minister Vijay has announced that a world-class multi-specialty hospital will be established in Perambur, Chennai, at a cost of ₹300 crore.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.