FOLLOW US

ON GOOGLE DISCOVER

முதல்வர் விஜய் சிரிப்பதைப் பார்க்க தனி ஸ்க்ரீன் வேண்டும்! தவெக எம்எல்ஏ கோரிக்கைதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு கார் வேண்டாம்! உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு! எண்ணூரில் மீன்கள் செத்து மிதப்பதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு: இபிஎஸ்நீட் போராட்டத்தில் தாக்குதல் நடத்திய போலீஸார் மீது எஃப்ஐஆர் பதிய மறுப்பு: ராகுல் தர்னாஆர்எஸ்எஸ் அமைப்புக்கு தடை விதிக்க அமெரிக்க ஆணையம் பரிந்துரை!

தாய்மாமன் தங்க மோதிர திட்டம்! 1 பைசாவுக்கு டெண்டர் கோரியதா நகைக்கடை?

தாய்மாமன் தங்க மோதிர திட்டத்துக்கான ஒப்பந்தப்புள்ளியில் 1 பைசாவுக்கு டெண்டர் கோரப்பட்டதாக வரும் தகவல் பற்றி...

தாய்மாமன் தங்க மோதிர திட்டம்

தாய்மாமன் தங்க மோதிர திட்டம்

Published On :21 ஆகஸ்ட் 2026, 2:07 pm IST

தமிழ்நாட்டில் ஆளும் தவெக அரசு கொண்டு வரவிருக்கும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்துக்கான ஒப்பந்தப்புள்ளியில், தங்க நகைக்கடை ஒன்று, ஒரு பைசாவுக்கு டெண்டர் கோரியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல்வர் ஜோசப் விஜய் அவர்களால் அறிவிக்கப்பட்ட தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு, பராமரிப்புப் பொருள்களுடன் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படவிருக்கிறது. தமிழர்களின் பாரம்பரியமான தாய்மாமன் சீர் மரபை போற்றும் வகையில் இந்த திட்டம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இந்த திட்டத்தின் கீழ், தங்க மோதிரங்கள் வாங்க தமிழக அரசு சார்பில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது.

இந்த டெண்டரில் பங்கேற்ற நகைக் கடைகள் கோரியிருந்த விலை நிர்ணய விவரங்கள் என்று ஒரு பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதில் மிகக் குறைந்த விலையைக் கோரியவராக அறியப்படும் நகைக்கடை, தங்க மோதிரம் செய்வதற்குத் தேவையான தங்கத்தின் விலையைத் தவிர்த்து, செய்கூலி, சேதாரம், போக்குவரத்து, பேக்கிங் என அனைத்துக்குமான செலவுகளுக்கும் ஒரு மோதிரத்துக்கு ஒரு பைசா கொடுத்தால் போதும் என குறிப்பிட்டிருக்கிறதாம். மற்ற நகைக் கடைகள் இதற்கு ரூ.400 முதல் ஆயிரம் ரூபாய் வரை கோரியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தகவலின் அடிப்படையில், மிகக் குறைந்த டெண்டர் கோரி, ஒரு பைசா நகைக் கடை, குறைந்த ஏலதாரர் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளதாம்.

அரசு மருத்துவமனைகளில் பெண்கள் மகப்பேறு செய்வதை ஊக்குவிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் செப்டம்பர் 15-ஆம் தேதி தொடங்கப்படவுள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே ஒப்பந்தப்புள்ளி நடைமுறையை அரசு இறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், ஒரு பைசா நிர்ணயித்திருக்கும் நகைக் கடைக்குத்தான் இந்த ரூ.755 கோடி மதிப்பிலான டெண்டர் ஒதுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ஆனால், இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

Summary

Gold Ring Scheme! Did a jewelry store call for a tender at 1 paisa?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.