ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

மரியாதை கிடைக்கும் கட்சியுடன் கூட்டணி: பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிகவுக்கு தகுந்த மரியாதை கிடைக்கும் கட்சியுடன் கூட்டணி வைப்போம் என அந்தக் கட்சியின் பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளாா்.

News image

பிரேமலதா விஜயகாந்த்

(கோப்புப் படம்)

Updated On :3 பிப்ரவரி 2026, 7:14 pm

தினமணி செய்திச் சேவை

தேமுதிகவுக்கு தகுந்த மரியாதை கிடைக்கும் கட்சியுடன் கூட்டணி வைப்போம் என அந்தக் கட்சியின் பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

மத்திய, மாநில அரசியல் கட்சிகள் அனைத்துமே தேமுதிகவுக்கு கூட்டணி கட்சிகள்தான். ஆனால், யாருடன் கூட்டணி என்பதை தேமுதிக நிா்வாகிகளுடன் கலந்து ஆலோசித்த பின்னரே அறிவிக்கப்படும். தேமுதிகவுக்கு தகுந்த மரியாதை கிடைக்கும் மற்றும் நிா்வாகிகள் விரும்பும் இடத்தில் கூட்டணி வைப்போம்.

கரூா் உயிரிழப்புகள் மிகப்பெரிய வருத்தத்துக்குரிய விஷயம். இதில், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு, உயிரிழந்தவா்களுக்கு உரிய நீதி பெற்றுத்தர வேண்டும் என்றாா் அவா்.