தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜாசெப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!
/

திமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள்? - கனிமொழி பதில்!

திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி பேட்டி...

News image

கனிமொழி - ENS

Updated On :4 பிப்ரவரி 2026, 2:09 pm IST

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருவதாக திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

"தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுரைப்படி பல்வேறு பகுதிகளுக்கு சென்று பல்வேறு அமைப்புகளின் கருத்துகளைக் கேட்டு வருகிறோம். இன்று சென்னையில் பல்வேறு பகுதிகளில் இருக்கும் பல அமைப்புகள் எங்களைச் சந்தித்து கருத்துகளை தெரிவித்திருக்கிறார்கள். அவர்களுடைய கருத்துகளை எல்லாம் ஒருங்கிணைத்து பரிசீலனை செய்து எந்த கருத்துகள் எல்லாம் தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் என்பதை முடிவு செய்து முதல்வரின் அனுமதி பெற்று பின்னர் தேர்தல் அறிக்கை உருவாகும். எங்களுடைய இணையதளம், செயலியில் உங்களுடைய கருத்துகளை தெரிவிக்கலாம்" என்றார்.

காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குழுவில் இருக்கக்கூடியவர்கள்தான் தொகுதிப் பங்கீடு மற்றும் கூட்டணி குறித்த மற்ற விஷயங்களைப் பேசுவார்கள். இதுவரையில் தொகுதிகள் பற்றி பேசப்படவில்லை, எனவே, நான் அதைப்பற்றி கருத்து சொல்ல முடியாது" என்று கூறிய அவர்,

எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்து, "தமிழ்நாட்டைச் சேர்ந்த சு. வெங்கடேசன், மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவர் ஒவ்வொரு முறை பேச முற்படும்போதும் தடுக்கப்பட்டு அவரது உரையை பதிவு செய்ய முடியாத சூழல் இருந்ததால்தான் அங்கிருந்த அத்தனை பேரும் அமளியில் ஈடுபட வேண்டிய சூழல் ஏற்பட்டது" என்றார்.

திமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்புள்ளதா? என்ற கேள்விக்கு, "யாராவது கூட்டணியில் புதிதாக வந்தால் முதல்வர் அதுகுறித்து அறிவிப்பார்" என்று தெரிவித்தார்.

Summary

DMK Kanimozhi replied on election aliance

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.