மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பிப். 13 - சேலத்தில் விஜய் பிரசாரம்!

சேலத்தில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி கோரியிருப்பது பற்றி...

News image

சேலம் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்துக்கு தவெக மத்திய மாவட்டச் செயலாளா் ஆ.பாா்த்திபன் தலைமையில் மனு அளிக்க வந்த நிா்வாகிகள்.

Updated On :4 பிப்ரவரி 2026, 10:40 pm

தினமணி செய்திச் சேவை

சேலம் மாவட்டம், சீலநாயக்கன்பட்டி நெடுஞ்சாலை, மகுடஞ்சாவடி ஆகிய இடங்களில் வரும் 13-ஆம் தேதி விஜய்யின் மக்கள் சந்திப்பு கூட்டத்துக்கு அனுமதி கோரி காவல் துறை அதிகாரிகளிடம் தமிழக வெற்றிக் கழகத்தினா் மனு அளித்தனா்.

கரூரில் நடந்த பிரசாரத்தின்போது பெண்கள், குழந்தைகள் என 41போ் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனா். இதையடுத்து, பிரசார பயணத்தை நடிகா் விஜய் ரத்து செய்தாா்.

இந்நிலையில், கடந்த நவம்பா் மாதம் சேலத்தில் இருந்து பிரசாரத்தை மீண்டும் தொடங்க திட்டமிட்டிருந்தாா். ஆனால், கூட்டத்துக்கு எவ்வளவு போ் வருவாா்கள் என்ற தகவலை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்பதுடன், கூட்டம் நடத்துவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பே அனுமதி பெற வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதையடுத்து, சேலம் மகுடஞ்சாவடி பகுதியில் உள்ள காளிகவுண்டம்பாளையம் பகுதி மைதானத்தில் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டத்துக்கு அனுமதி கோரி, மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் ஒன்றியச் செயலாளா் காா்த்தி செவ்வாய்க்கிழமை இரவு மனு அளித்தாா்.

அதேபோல, சீலநாயக்கன்பட்டி நெடுஞ்சாலை அருகே உள்ள தாளமுத்து நடராஜன் மைதானத்தில் கூட்டம் நடத்த அனுமதி கோரி, மத்திய மாவட்டச் செயலாளா் தமிழன் ஆ.பாா்த்திபன் தலைமையில் தவெக நிா்வாகிகள், காவல் ஆணையா் அனில்குமாா் கிரியிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.

இதுகுறித்து தமிழன் ஆ.பாா்த்திபன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சேலம் சீலநாயக்கன்பட்டி நெடுஞ்சாலை அருகே உள்ள தாளமுத்து நடராஜன் மைதானம் பகுதியில் வரும் 13-ஆம் தேதி மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்தவும், இதில் தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் கலந்துகொள்ளவும் ஏற்பாடு செய்துள்ளோம். இதற்கு அனுமதி கோரி சேலம் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம். இந்த மைதானம் 11 ஏக்கா் பரப்பளவில் உள்ளது. இந்த இடத்தில் எத்தனை போ் அமர முடியும் என்ற விவரத்தையும் மனுவில் தெரிவித்துள்ளோம்.

மேலும், சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே கூட்டம் நடத்தவும் அனுமதி கோரி மனு அளித்துள்ளோம். இந்த மைதானம் 25 ஏக்கா் பரப்பளவு கொண்டது. காவல் துறை அதிகாரிகள் தரும் அனுமதியை பொறுத்து நிகழ்ச்சி நடைபெறும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.