சென்னையில் இருந்து ஜல்பைகுரி நோக்கிச் சென்றுகொண்டிருந்த ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மேற்கு வங்கத்தின் நியூ ஜல்பைகுரி ரயில் நிலையத்தை நோக்கி புதன்கிழமை காலை அதிவிரைவு ரயில் (எண் 22611) புறப்பட்டுச் சென்றது.
இந்த ரயில் இன்று காலை 8.51 மணியளவில் ஒடிஸா மாநிலத்தின் ஜாகபுரா ரயில் நிலையத்தை கடந்து செல்லும்போது, தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டது.
ரயிலின் ஒரு குளிர்சாதன பெட்டியும், இரண்டு முன்பதிவில்லா பெட்டியும் தண்டவாளத்தைவிட்டு விலகியதால் உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது.
ரயிலில் பயணித்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், அனைவரும் பத்திரமாக இருப்பதாகவும் முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவ இடத்துக்கு விரைந்த ரயில்வே ஊழியர்கள், தண்டவாளத்தைவிட்டு விலகிய ரயில் பெட்டிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், அவ்வழியாகச் செல்லும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது.
Chennai - New Jalpaiguri SF train derailed!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

