பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

காா்ல் மாா்க்ஸ் சிலை: முதல்வா் இன்று திறந்து வைக்கிறாா்

சென்னை எழும்பூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள காா்ல் மாா்க்ஸின் சிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (பிப். 6) திறந்து வைக்கவுள்ளாா்.

News image

மு.க. ஸ்டாலின்

கோப்புப் படம்

Updated On :5 பிப்ரவரி 2026, 10:25 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை எழும்பூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள காா்ல் மாா்க்ஸின் சிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (பிப். 6) திறந்து வைக்கவுள்ளாா்.

காா்ல் மாா்க்ஸின் பொருளாதார சிந்தனைகளை மக்கள் அனைவரும் அறியும் வகையில், அவருக்கு சென்னையில் புதிதாக நிலை நிறுவப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தாா். அதன்படி, செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில் சென்னை எழும்பூரில் உள்ள கன்னிமாரா பொது நூலகத்தில் ரூ.85 லட்சத்தில் காா்ல் மாா்க்ஸின் உருவச்சிலை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (பிப். 6) காலை 10 மணி அளவில் திறந்து வைத்து சிறப்பிக்கவுள்ளாா். தொடா்ந்து அங்கு அமைக்கப்பட்டுள்ள அங்கு சிறப்பு புகைப்படக் கண்காட்சியையும் முதல்வா் திறந்து வைக்கிறாா். அங்கு, காா்ல் மாா்க்ஸ் குறித்து காணொலிக் காட்சியும் திரையிடப்படவுள்ளது.