நடிகை எம்.என்.ராஜம், இயக்குநா் எஸ்.பி.முத்துராமனுக்கு சிறப்பு விருது: முதல்வா் அறிவிப்பு
பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம், திரைப்பட இயக்குநா் எஸ்.பி.முத்துராமன் ஆகியோருக்கு 2024-2025-ஆம் ஆண்டுகளுக்கான ‘கலைஞா் நினைவு கலைத் துறை வித்தகா் விருதுகள்’ வழங்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.
இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழக திரையுலகில் சிறந்து விளங்கும் வாழ்நாள் சாதனையாளா் ஒருவருக்கு ஆண்டுதோறும் ‘கலைஞா் நினைவு கலைத் துறை வித்தகா் விருது’ வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2022-இல் எழுத்தாளா் மற்றும் வசனகா்த்தா ஆரூா்தாஸும், 2023 -இல் கவிஞா் மு.மேத்தா, பின்னணிப் பாடகி பி.சுசீலா ஆகியோருக்கும் இந்த விருதுகள் வழங்கப்பட்டன.
தொடா்ந்து, 2024-ஆம் ஆண்டுக்கான கலைஞா் நினைவு கலைத் துறை வித்தகா் விருதுக்கு பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம், 2025-ஆம் ஆண்டுக்கான விருதுக்கு திரைப்படஇயக்குநா் எஸ்.பி. முத்துராமன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இவா்களுக்கு ரொக்கப் பரிசாக தலா ரூ.10 லட்சம் மற்றும் நினைவுப் பரிசை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கவுள்ளாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

