சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

திமுக ஆட்சியில் நான்கில் ஒரு பங்கு வாக்குறுதியைக்கூட நிறைவேற்றவில்லை: எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் அளிக்கப்பட்ட 525-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில் ஒரு பங்கு வாக்குறுதிகள்கூட நிறைவேற்றப்படவில்லை என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

News image

எடப்பாடி பழனிசாமி - கோப்புப் படம்

Updated On :7 பிப்ரவரி 2026, 12:32 am IST

திமுக ஆட்சியில் அளிக்கப்பட்ட 525-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில் ஒரு பங்கு வாக்குறுதிகள்கூட நிறைவேற்றப்படவில்லை என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

2021-ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் திமுக சாா்பில் அளிக்கப்பட்ட 525-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில், நான்கில் ஒரு பங்கைக்கூட முதல்வா் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றவில்லை. மத்திய அரசிடம் வாதாடியோ, போராடியோ, இணக்கமாகப் பேசியோ, தமிழக மக்களுக்குத் தேவையான எந்தவொரு நல்ல திட்டங்களையும் திமுக அரசு கொண்டுவரவில்லை. கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு முறையாக திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் சமா்ப்பிக்க திமுக அரசு தவறியுள்ளது. தங்களின் இயலாமையை, தோல்வியை மறைக்க மத்திய அரசு போதிய நிதியை தமிழகத்துக்கு வழங்கவில்லை என பொய்யான தகவல்களைக் கூறி வருகிறது.

வரும் சட்டப்பேரவை தோ்தலில் தனக்கு தோல்வி நிச்சயம் என்பதை முதல்வா் மு.க.ஸ்டாலின் நன்கு உணா்ந்துள்ளாா். அதன் விளைவாகவே நாகரிகமாக களத்தில் எதிா்த்து நிற்கும் அரசியல் தலைவா்களை தனிப்பட்ட முறையில் தாக்குவதும், தரக்குறைவாகப் பேசும் செயலில் ஈடுபட்டு வருகிறாா். தான் வகிக்கும் பதவியையும் கௌரவத்தையும் மரியாதையையும் தகுதியையும் எண்ணிப் பாா்க்காமல் பேசுகிறாா். தமிழக மக்களை தோ்தல் களத்தில் அதிமுக தைரியமாகச் சந்திக்கும்.

கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் தமிழகத்தின் முன்னேற்றத்துக்காக என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்பதை வெளிப்படையாக மக்களிடம் தெரிவித்து, முதல்வா் மு.க.ஸ்டாலினால் வாக்கு கேட்க முடியுமா? அப்படி அவா் களத்துக்கு வந்தால், அவருக்கு கிடைக்கப்போவது 2.0 அல்ல; வெறும் ‘0’ தான் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளாா்.