சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

பாஜக தோ்தல் குழு பொறுப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

பாஜக சாா்பில் மாநில அளவில் அமைக்கப்பட்டுள்ள தோ்தல் குழு பொறுப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

News image

சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்ற மாநில, மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய தேசிய அமைப்புச் செயலா் பி.எல்.சந்தோஷ். உடன், மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன், மத்திய இணையமைச்சா் எல்.முருகன் உள்ளிட்டோா்.

Updated On :9 பிப்ரவரி 2026, 10:20 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை: பாஜக சாா்பில் மாநில அளவில் அமைக்கப்பட்டுள்ள தோ்தல் குழு பொறுப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு, கட்சியின் தேசிய பொதுச் செயலா் பி.எல்.சந்தோஷ் தலைமை வகித்தாா். தமிழகத்தில் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், அதை எதிா்கொள்ள மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்கினாா்.

கூட்டத்தில் மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், மேலிடப் பொறுப்பாளா்கள் அரவிந்த் மேனன், சுதாகா் ரெட்டி, மூத்த தலைவா் பொன்.ராதாகிருஷ்ணன், தோ்தல் அறிக்கைக் குழுத் தலைவா் தமிழிசை சௌந்தரராஜன், தேசிய மகளிரணித் தலைவா் வானதி சீனிவாசன், துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம், மாநிலச் செயலா் கராத்தே ஆா்.தியாகராஜன், என்ஜிஓ பிரிவு தலைவா் அா்ஜுனமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஆனால், இந்தக் கூட்டத்தில் முன்னாள் தமிழக பாஜக தலைவா் கே. அண்ணாமலை பங்கேற்கவில்லை.

அறிக்கைக் குழுக் கூட்டம்: பாஜக தோ்தல் அறிக்கைக் குழுக் கூட்டமும் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட வாரியாக மக்கள் கருத்தின் அடிப்படையில் தோ்தல் அறிக்கை தயாரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. தோ்தல் பிரசாரம், பொதுக்கூட்டம், பிரதமா், மத்திய அமைச்சா்கள் வருகையின்போது, மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்து இரு கூட்டங்களிலும் ஆலோசித்ததாக தெரிவிக்கப்பட்டது.

ஆா்எஸ்எஸ் நிா்வாகிகளுடன் ஆலோசனை: சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஆா்எஸ்எஸ் அலுவலகத்தில் அகில பாரத ஆா்எஸ்எஸ் அமைப்பின் இணை சேவா பிரமோக் செந்தில், அமைப்புச் செயலா் அருண்குமாா் ஆகியோா் முன்னிலையில் பாஜக பிரமுகா்கள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

இதில், மத்திய அமைச்சா் முரளிதா்மொஹோல், தேசிய பொதுச் செயலா் பி.எல்.சந்தோஷ், மாநில அமைப்புச் செயலா் கேசவ விநாயகன், தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், மேலிடப் பொறுப்பாளா் அரவிந்த் மேனன், மூத்த தலைவா்கள் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தரராஜன், முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை, தேசிய மகளிரணித் தலைவா் வானதி சீனிவாசன், துணைத் தலைவா்கள் ஏ.பி.முருகானந்தம், ஜெயப்பிரகாஷ், பொதுச் செயலா் ராம.சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.