வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் பறக்கும் படை சோதனை! 15 நிமிடங்கள் நடைபெற்றது!நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? - நயினார் நாகேந்திரன் பதில்!

கூட்டணி குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தகவல்...

News image

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

Updated On :11 பிப்ரவரி 2026, 7:49 am

இணையதளச் செய்திப் பிரிவு

தேமுதிக உடன் இதுவரை பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

தேமுதிகவுடன் அதிமுக நடத்திய கூட்டணி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் தற்போது தில்லியில் உள்ள பாஜக தலைமை, தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்தார்.

மேலும் தேமுதிக மத்திய பாஜக ஆட்சியில் பங்கு கேட்பதால் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக விளக்கம் தெரிவித்தார்.

இந்நிலையில் இதுபற்றிய கேள்விக்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன்,

"தேமுதிக உடன் இதுவரை பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. அப்படி நடக்கும்போது நான் உங்களுக்கு சொல்கிறேன்.

அனைத்துத் தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியது பற்றி நான் கருத்து சொல்ல முடியாது. அது அவருடைய கருத்து.

குடியரசு நாளன்று தேநீர் விருந்தில், என்னுடைய நீண்டகால நண்பர் என்ற முறையில் சுதீஷை சந்தித்து பேசிக் கொண்டிருத்தேனே தவிர கூட்டணி பற்றி நாங்கள் பேசவில்லை.

தேமுதிகவுடன் கூட்டணியா? என்பது பற்றி இப்போது கருத்து சொல்ல முடியாது. மார்ச் 1 ஆம் தேதி பிரதமர் மோடி வருவார்கள். அப்போது பார்க்கலாம்" என்று கூறினார்.

பிரதமர் நிகழ்வில் மேடையில் தேமுதிகவை பார்க்கலாமா? என்ற கேள்விக்கு 'பார்க்கலாம்' என்று கூறினார் நயினார் நாகேந்திரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.