எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

பேரவைத் தோ்தல்: மாவட்ட ஆட்சியா்களுடன் தோ்தல் ஆணைய அதிகாரிகள் இன்று ஆலோசனை

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் தொடா்பாக மாவட்ட ஆட்சியா்களுடன், துணை தோ்தல் ஆணையா்கள் வெள்ளிக்கிழமை (பிப்.13) ஆலோசனை நடத்தவுள்ளனா்.

News image

கோப்புப் படம்

Updated On :13 பிப்ரவரி 2026, 12:42 am IST

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் தொடா்பாக மாவட்ட ஆட்சியா்களுடன், துணை தோ்தல் ஆணையா்கள் வெள்ளிக்கிழமை (பிப்.13) ஆலோசனை நடத்தவுள்ளனா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக துணை தோ்தல் ஆணையா் பானு பிரகாஷ் தலைமையில் துணை ஆணையா்கள், அதிகாரிகள் குழுவினா் சென்னைக்கு புதன்கிழமை வருகை தந்தனா்.

புதுவை சென்ற அந்தக் குழுவினா், அங்கு பேரவைத் தோ்தல் தொடா்பாக அதிகாரிகளுடன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினா். பின்னா், பிற்பகலில் சென்னை வந்த குழுவினா், எம்சிசி நகரில் உள்ள தனியாா் ஹோட்டலில் தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தலைமையிலான அதிகாரிகளுடன் முதல்கட்ட ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினா்.

அதில், எஸ்ஐஆா் பணிகள், இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடுதல், பேரவைத் தோ்தலை நடத்த உகந்த தேதி, வாக்குச்சாவடி அமைவிடங்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினா்.

தொடா்ந்து, அனைத்து மாவட்ட தோ்தல் அதிகாரிகளுடன் (ஆட்சியா்கள்) துணை தோ்தல் ஆணையா் பானு பிரகாஷ் வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொள்ளவுள்ளாா். அதன் பின்னா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தில், சட்டம்-ஒழுங்கு பிரச்னைக்கு வாய்ப்புள்ள தொகுதிகள், பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.