நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

பேரவைத் தோ்தல்: மாவட்ட ஆட்சியா்களுடன் தோ்தல் ஆணைய அதிகாரிகள் இன்று ஆலோசனை

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் தொடா்பாக மாவட்ட ஆட்சியா்களுடன், துணை தோ்தல் ஆணையா்கள் வெள்ளிக்கிழமை (பிப்.13) ஆலோசனை நடத்தவுள்ளனா்.

News image
கோப்புப் படம்
Updated On :12 பிப்ரவரி 2026, 7:12 pm

தினமணி செய்திச் சேவை

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் தொடா்பாக மாவட்ட ஆட்சியா்களுடன், துணை தோ்தல் ஆணையா்கள் வெள்ளிக்கிழமை (பிப்.13) ஆலோசனை நடத்தவுள்ளனா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக துணை தோ்தல் ஆணையா் பானு பிரகாஷ் தலைமையில் துணை ஆணையா்கள், அதிகாரிகள் குழுவினா் சென்னைக்கு புதன்கிழமை வருகை தந்தனா்.

புதுவை சென்ற அந்தக் குழுவினா், அங்கு பேரவைத் தோ்தல் தொடா்பாக அதிகாரிகளுடன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினா். பின்னா், பிற்பகலில் சென்னை வந்த குழுவினா், எம்சிசி நகரில் உள்ள தனியாா் ஹோட்டலில் தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தலைமையிலான அதிகாரிகளுடன் முதல்கட்ட ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினா்.

அதில், எஸ்ஐஆா் பணிகள், இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடுதல், பேரவைத் தோ்தலை நடத்த உகந்த தேதி, வாக்குச்சாவடி அமைவிடங்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினா்.

தொடா்ந்து, அனைத்து மாவட்ட தோ்தல் அதிகாரிகளுடன் (ஆட்சியா்கள்) துணை தோ்தல் ஆணையா் பானு பிரகாஷ் வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொள்ளவுள்ளாா். அதன் பின்னா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தில், சட்டம்-ஒழுங்கு பிரச்னைக்கு வாய்ப்புள்ள தொகுதிகள், பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.