

அதிமுக, திமுக என இரண்டு பக்கமும் தேமுதிக பேசுகிறது என்பது தவறான தகவல் என கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
திமுக கூட்டணி, அதிமுக - பாஜக கூட்டணி, விஜய்யின் தவெக, சீமானின் நாம் தமிழர் என 4 முனைப் போட்டி நிலவுகிறது.
தேமுதிகவும் ராமதாஸின் பாமகவும் ஓபிஎஸ் அணியும் இன்னும் கூட்டணி குறித்து அறிவிக்கவில்லை.
இந்நிலையில்அதிமுக - பாஜக கூட்டணியில் இணைய தேமுதிக பேச்சுவார்த்தை நடத்துவதாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார். திமுக கூட்டணியில் இணையவும் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் இதுபற்றிய செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த பிரேமலதா விஜயகாந்த்,
"அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அமைச்சர் எ.வ. வேலு ஆகியோர் இதற்கு பதில் அளித்திருக்கிறார்கள். இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை என்பது தவறான தகவல்.
எங்களுடைய மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் எந்த கூட்டணியை விரும்புகிறார்களோ அந்த கூட்டணியைதான் தேமுதிக அமைக்கும்.
எங்களுடைய கட்சி தேமுதிக, என்ன முடிவு எடுக்க வேண்டும், கூட்டணியை எப்போது அறிவிக்க வேண்டும் என எங்களுடைய நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்துதான் செய்ய முடியும்" என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.