தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

எழும்பூா் - கன்னியாகுமரி இடையே இன்று சிறப்பு விரைவு ரயில் இயக்கம்

மகாசிவராத்திரியை முன்னிட்டு சென்னை எழும்பூரிலிருந்து வெள்ளிக்கிழமை (பிப். 13) கன்னியாகுமரிக்கு சிறப்பு அதிவிரைவு ரயில் இயக்கப்படவுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :12 பிப்ரவரி 2026, 9:02 pm

மகாசிவராத்திரியை முன்னிட்டு சென்னை எழும்பூரிலிருந்து வெள்ளிக்கிழமை (பிப். 13) கன்னியாகுமரிக்கு சிறப்பு அதிவிரைவு ரயில் இயக்கப்படவுள்ளது.

அதேபோல வரும் 16- ஆம் தேதி கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வியாழக்கிழமைவெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: மகாசிவராத்திரியை முன்னிட்டு பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிா்க்க, சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி, சென்னை எழும்பூரிலிருந்து வெள்ளிக்கிழமை இரவு 11.45 மணிக்கு சிறப்பு அதிவிரைவு ரயில் (எண்- 06135) புறப்பட்டு சனிக்கிழமை (பிப். 14) பிற்பகல் 1 மணிக்கு கன்னியாகுமரியை அடையும்.

மறுமாா்க்கத்தில் வரும் 16- ஆம் தேதி திங்கள்கிழமை இரவு 9.35 மணிக்கு கன்னியாகுமரியிலிருந்து புறப்படும் சிறப்பு அதிவிரைவு ரயில் செவ்வாய்க்கிழமை (பிப். 17) காலை 10.15 மணிக்கு சென்னை வந்தடையும்.

கொல்லத்துக்கு சிறப்பு ரயில்: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து வெள்ளிக்கிழமை (பிப். 13) இரவு 11.35 மணிக்கு புறப்படும் சிறப்பு அதிவேக விரைவு ரயில் (எண் -06113) சனிக்கிழமை (பிப். 14) மாலை 4.30 மணிக்கு கொல்லம் சென்றடையும். அதேபோல, வரும் 16 -ஆம் தேதி கொல்லத்திலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு சிறப்பு அதிவேக ரயில் இயக்கப்படவுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.