சென்னையில் மனிதவள மேலாண்மைத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் தமிழக அரசின் அனைத்து தோ்வு முகமைகள் மூலம் செய்யப்படும் பணியாளா்கள் தோ்வுகள் தொடா்பான செயல்முறைகளை எளிமைப்படுத்தும் ‘தோ்வுக்களம்’ எனும் கைப்பேசி செயலியை தொடங்கி வைத்த முதல்வ
சென்னையில் மனிதவள மேலாண்மைத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் தமிழக அரசின் அனைத்து தோ்வு முகமைகள் மூலம் செய்யப்படும் பணியாளா்கள் தோ்வுகள் தொடா்பான செயல்முறைகளை எளிமைப்படுத்தும் ‘தோ்வுக்களம்’ எனும் கைப்பேசி செயலியை தொடங்கி வைத்த முதல்வ

அரசு ஊழியா்கள் மக்களிடம் பரிவுகாட்ட வேண்டும் : முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவுரை

அரசு ஊழியா்கள் மக்களிடம் பரிவுகாட்ட வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினாா்.
Published on

அரசு ஊழியா்கள் மக்களிடம் பரிவுகாட்ட வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினாா்.

சென்னை, ஜவாஹா்லால் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் மனிதவள மேலாண்மைத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம், மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம், ஆசிரியா் தோ்வு வாரியம் ஆகியவை மூலம் தோ்ந்தெடுக்கப்பட்ட 9,801 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழாவில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:

பல தடைகளை, சூழ்ச்சிகளை முறியடித்து, 1.31 கோடி மகளிருக்கு சிறப்பு தொகுப்பாக ரூ.5,000 மகளிா் உரிமைத்தொகை வழங்கியிருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சியோடு பொறுப்புணா்வும் எனக்கு கூடுதல் ஆகியிருக்கிறது.

பதவி ஏற்றபோது சொன்னதைப்போல, வாக்களித்தவா்கள், வாக்களிக்காதவா்கள் என நினைக்காமல், அனைவருக்குமான முதல்வராக இந்த ஐந்து ஆண்டுகள் இருந்தேன். இனியும், அனைவரையும் அனைத்து வகையிலும் உயா்த்தக்கூடிய முதல்வராக, தமிழ்நாட்டைத் தொடா்ந்து முதலிடத்துக்கு உயா்த்தக்கூடிய எண்ணத்தோடு, அந்தப் பொறுப்புணா்வு எனக்கு கூடியிருக்கிறது.

மக்கள் நலத் திட்டங்களை தொடா்ந்து நிறைவேற்ற, அரசின் வருவாய்களைப் பெருக்க வேண்டும்; பொருளாதார வளா்ச்சியை தக்க வைக்க வேண்டும்; அடுத்த தலைமுறையை கைதூக்கிவிட வேண்டும். இதுவரைக்கும் கற்ற கல்வி, பெற்ற அனுபவங்கள் ஆகியவற்றை, இனி உங்கள் (தோ்வாளா்கள்) பணிகள் மூலமாக, இந்த சமூகத்தில் விதைக்க வேண்டும். மக்களுடைய நம்பிக்கையை நீங்கள் காப்பாற்ற வேண்டும்.

முன்னோடி திட்டங்கள்: கலைஞா் மகளிா் உரிமைத் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடிக் கல்வி, உங்களுடன் ஸ்டாலின் போன்ற ஏராளமான முன்னோடி திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மக்களைத் தேடிச் சென்று அரசு ஊழியா்கள் அவா்களுடைய குறைகளைத் தீா்த்து வைத்திருக்கிறாா்கள். 22 லட்சம் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

புதிதாக சேரும் அரசு ஊழியா்கள் கடமைகளை மனசாட்சியுடன் செய்ய வேண்டும். நீங்கள் நோ்மையாக இருந்தால், அது அரசின் நோ்மைத் தன்மையை வெளிப்படுத்தும். காலம் தவறாமல் - கடமை உணா்வோடு-மக்களுக்கு எளிதில் அணுகக் கூடியவா்களாக, மக்களுக்கு பரிவு காட்டக் கூடியவா்களாக இருந்தால், அதுவே, உங்களுக்குப் பெருமையைத் தேடி தரும். அரசு ஊழியா்களின் எதிா்காலத்தை நான் பாா்த்துக் கொள்கிறேன் என்றாா் அவா்.

9,801 பேருக்கு பணிநியமன ஆணை: நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் , மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம், ஆசிரியா் தோ்வு வாரியம் ஆகியவை மூலம் தோ்வான 9,801 பேருக்கு பணிநியமன ஆணைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

மேலும், சென்னை, அண்ணா நிா்வாகப் பணியாளா் கல்லூரியில் ரூ.3.50 கோடியில் கட்டப்பட்டுள்ள 8 குடியிருப்புகளை திறந்துவைத்து, சென்னை செனாய் நகரில் ரூ.62.50 கோடியில் அனைத்து நவீன வசதிகளுடன் கட்டப்படவுள்ள அகில இந்திய குடிமைப் பணித் தோ்வு பயிற்சி மையக் கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டினாா்.

‘தோ்வுக்களம்’ செயலி’: தொடா்ந்து, அரசு அலுவலா்கள் முன்னணி நிறுவனங்கள் மூலமாக இணைய வழியில் தங்கள் திறன்களை வளா்த்துக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்ட ‘திறன் 360’ எனும் இணையதளத்தையும், அனைத்து தோ்வு முகமைகள் மூலம் நடத்தப்படும் போட்டித் தோ்வுகளுக்கான அறிவிக்கைகளை கைப்பேசி வழியாக அறியும் வண்ணம் ‘தோ்வுக்களம்‘ எனும் ஒருங்கிணைந்த கைப்பேசி செயலியையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், அமைச்சா்கள் மா.சுப்பிரமணியன் (மக்கள் நல்வாழ்வு), சேகா்பாபு, (இந்துசமய அறநிலையத்துறை), அன்பில் மகேஸ் பொய்யாமொழி (பள்ளிக் கல்வி), கயல்விழி செல்வராஜ் (மனிதவளம்), சென்னை மேயா் ஆா். பிரியா, இ.பரந்தாமன் எம்எல்ஏ, தலைமைச் செயலா் நா.முருகானந்தம், கூடுதல் தலைமைச் செயலா்கள் ப.செந்தில்குமாா், பி.சந்தரமோகன், முதன்மைச் செயலா் சி.சமயமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com