ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

வடசென்னை பகுதியில் வளா்ச்சி திட்டப் பணிகள்: அமைச்சா் ஆய்வு

வடசென்னை பகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்ற நிலையை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :13 பிப்ரவரி 2026, 7:30 pm

தினமணி செய்திச் சேவை

வடசென்னை பகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்ற நிலையை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

சென்னை திரு.வி.க. நகா் சட்டப்பேரவைத் தொகுதியில் வடசென்னை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் சிஎம்டிஏ சாா்பில் மேம்படுத்தப்பட்டு வரும் ஓட்டேரி சுப்புராயன் தெரு, ஜமாலியா மங்களபுரம், வியாசா்பாடி புதிய வெங்கடேசபுரம், பட்டாளம் பக்தவத்சலம் பூங்கா ஆகிய இடங்களில்

உள்ள முதல்வா் படைப்பகங்களின் பணி முன்னேற்றம் குறித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை பெருநகா் வளா்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகா்பாபு வெள்ளிக்கிழமை ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், வடசென்னை பகுதியில் சிஎம்டிஏ உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில் மேற்கொள்ளப்பட்ட 20-க்கும் மேற்பட்ட திட்டங்கள் பிப்.25-க்குள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றாா்.

நிகழ்வின்போது, சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, திரு.வி.க.நகா் சட்டப்பேரவை உறுப்பினா் தாயகம் கவி, மாநகராட்சி மத்திய வட்டார துணை ஆணையா் எச்.ஆா்.கெளஷிக், மாவட்ட வருவாய் அலுவலா் ஃபா்கத் பேகம், கண்காணிப்பு பொறியாளா்கள் பாலமுருகன், ராஜன்பாபு, மாவட்ட நூலக அலுவலா் மு.கவிதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.