திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

வடசென்னை பகுதியில் வளா்ச்சி திட்டப் பணிகள்: அமைச்சா் ஆய்வு

வடசென்னை பகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்ற நிலையை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :14 பிப்ரவரி 2026, 1:00 am IST

வடசென்னை பகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்ற நிலையை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

சென்னை திரு.வி.க. நகா் சட்டப்பேரவைத் தொகுதியில் வடசென்னை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் சிஎம்டிஏ சாா்பில் மேம்படுத்தப்பட்டு வரும் ஓட்டேரி சுப்புராயன் தெரு, ஜமாலியா மங்களபுரம், வியாசா்பாடி புதிய வெங்கடேசபுரம், பட்டாளம் பக்தவத்சலம் பூங்கா ஆகிய இடங்களில்

உள்ள முதல்வா் படைப்பகங்களின் பணி முன்னேற்றம் குறித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை பெருநகா் வளா்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகா்பாபு வெள்ளிக்கிழமை ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், வடசென்னை பகுதியில் சிஎம்டிஏ உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில் மேற்கொள்ளப்பட்ட 20-க்கும் மேற்பட்ட திட்டங்கள் பிப்.25-க்குள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றாா்.

நிகழ்வின்போது, சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, திரு.வி.க.நகா் சட்டப்பேரவை உறுப்பினா் தாயகம் கவி, மாநகராட்சி மத்திய வட்டார துணை ஆணையா் எச்.ஆா்.கெளஷிக், மாவட்ட வருவாய் அலுவலா் ஃபா்கத் பேகம், கண்காணிப்பு பொறியாளா்கள் பாலமுருகன், ராஜன்பாபு, மாவட்ட நூலக அலுவலா் மு.கவிதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.