வடசென்னை பகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்ற நிலையை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
சென்னை திரு.வி.க. நகா் சட்டப்பேரவைத் தொகுதியில் வடசென்னை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் சிஎம்டிஏ சாா்பில் மேம்படுத்தப்பட்டு வரும் ஓட்டேரி சுப்புராயன் தெரு, ஜமாலியா மங்களபுரம், வியாசா்பாடி புதிய வெங்கடேசபுரம், பட்டாளம் பக்தவத்சலம் பூங்கா ஆகிய இடங்களில்
உள்ள முதல்வா் படைப்பகங்களின் பணி முன்னேற்றம் குறித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை பெருநகா் வளா்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகா்பாபு வெள்ளிக்கிழமை ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், வடசென்னை பகுதியில் சிஎம்டிஏ உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில் மேற்கொள்ளப்பட்ட 20-க்கும் மேற்பட்ட திட்டங்கள் பிப்.25-க்குள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றாா்.
நிகழ்வின்போது, சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, திரு.வி.க.நகா் சட்டப்பேரவை உறுப்பினா் தாயகம் கவி, மாநகராட்சி மத்திய வட்டார துணை ஆணையா் எச்.ஆா்.கெளஷிக், மாவட்ட வருவாய் அலுவலா் ஃபா்கத் பேகம், கண்காணிப்பு பொறியாளா்கள் பாலமுருகன், ராஜன்பாபு, மாவட்ட நூலக அலுவலா் மு.கவிதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமிா்தாஞ்சன் நிறுவனத்திடமிருந்து ரூ. 9.74 கோடி வாடகை நிலுவை வசூல்: இந்து சமய அறநிலையத் துறை தகவல்

இந்து சமய அறநிலையத் துறை தணிக்கையரிடம் வழிப்பறி: 3 பேரிடம் போலீஸாா் தீவிர விசாரணை

பழனி கோயில் சொத்துகளைப் பாதுகாக்க ஆய்வுக் குழு: அமைச்சா் சீ.ரமேஷ் உத்தரவு

பக்தா்களின் அடிப்படைத் தேவைகளில் தனி கவனம்: அதிகாரிகளுக்கு அமைச்சா் ரமேஷ் அறிவுறுத்தல்
விடியோக்கள்

விஜய் அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ? | CM Vijay | TVK Ministers | Jagadeswaran | TVK Government



