இன்று இறுதியாகும் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்இன்று டெல்டாவில் பலத்த மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 போ் கைதுஇந்தியா - நேபாளம் இடையே ரயில் போக்குவரத்து: இரு நாடுகளின் அதிகாரிகள் ஆலோசனைகேரளத்தில் நிபா வைரஸால் ஒருவா் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
/

திருச்சி அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு! பெண் கைது!!

திருச்சி அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை மீட்கப்பட்டது பற்றி...

News image

திருச்சி அரசு மருத்துவமனை

Updated On :14 பிப்ரவரி 2026, 3:44 pm IST

திருச்சி அரசு மருத்துவமனையில் காணாமல்போன குழந்தை மீட்கப்பட்டுள்ளது.

திருச்சி அரசு மருத்துவமனையில் கடந்த பிப். 11 ஆம் தேதி விக்னேஷ்- சுகன்யா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் குழந்தைக்கு தடுப்பூசி போடுவதாகக் கூறி பெண் ஒருவர் குழந்தையைக் கடத்திச் சென்றுள்ளார்.

குழந்தை காணாமல் போனதையடுத்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு தேடி வந்த நிலையில், குழந்தை இன்று பத்திரமாக மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குழந்தையைக் கடத்திய பெண்ணை துறையூர் அருகே காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குழந்தை இல்லாத ஏக்கத்தில் எடுத்துச் சென்றதாக கைதான மீனாட்சி என்பவர் வாக்குமூலம் அளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Summary

Kidnapped child rescued from Trichy government hospital; Woman arrested

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.