தாமிரபரணி ஆற்றில் இறந்தவர்கள் ஆடை, பொருள்களை வீசத் தடை!அப்டேட் ஆன அம்மா உணவகம்! தவெக அரசின் வருகையால் புத்துயிர் பெற்றது!நாட்டில் சரி பாதி முதல்வர்கள் மீது குற்ற வழக்குகள்!தூங்கிக் கொண்டிருப்பது யார்? திமுகவுக்கு தவெக விளக்கம்தேனிலவு கொலை: சோனம் ரகுவன்ஷி நீதிமன்றத்தில் சரண்செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு! சென்னை தலைமைச் செயலகத்தில் 3 பெண்கள் தற்கொலை முயற்சி! பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே!
/

தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ மனோகரன்!

அதிமுக முன்னாள் எம்எல்ஏ மனோகரன் தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

News image

Photo credit X

Updated On :16 பிப்ரவரி 2026, 9:51 am IST

அதிமுக முன்னாள் எம்எல்ஏ மனோகரன் தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

மனோகரன், 2016ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து 2021 பேரவைத் தேர்தலிலும் அதிமுக சார்பில் அவர் களமிறங்கனார்.

ஆனால் தோல்வியை தழுவினார். இந்த நிலையில் சென்னையில் தவெக தலைவர் விஜய்யை சந்தித்து அக்கட்சியில் மனோகரன் இணைந்துள்ளார். வரவிருக்கும் பேரவைத் தேர்தலில் தவெக சார்வில் வாசுதேவநல்லூர் தொகுதியில் மனோகரன் மீண்டும் களமிறக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை எதிர்கொள்ள பிரதான கட்சிகள் தயாராகி வரும் நிலையில் மற்றொரு புறம் அரசியல் பிரபலங்கள் கட்சி மாறியும் வருகின்றனர்.

Summary

Former AIADMK MLA Manoharan joined that party in the presence of TVK leader Vijay.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.