மாசி அமாவாசை: முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு

முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்த மக்கள்.
முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்த மக்கள்.
முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்த மக்கள்.
Updated on
1 min read

மாசி மாத மறைநிலா அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கனக்கான மக்கள் தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுத்து அக்னி தீர்த்தக் கடலில் நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா கடந்த 8 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சிவராத்திரி, சுவாமி, அம்பாள் தேரோட்டம் நிறைவடைந்தது.

இதனையடுத்து, இன்று மறைநில அமாவாசையை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கனக்கான பக்தர்கள் ராமேஸ்வரம் வருகை தந்தனர்.

தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து அக்னி தீர்த்தக் கடலில் நீராடினர்.

இதனைத் தொடர்ந்து, ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் நீண்ட வரிசையில் நின்று நீராடினர். இதன் பின்னர் சுவாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்களின் வருகையை முன்னிட்டு இந்து சமய அறநிலைத்துறையினர் விரிவாக ஏற்பாடுகளை செய்திருந்தனர். கூடுதல் பாதுகாப்புப் பணியில் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபட்டனர்.

Summary

Masi Amavasai Offering offerings to ancestors and worshipping them

முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்த மக்கள்.
தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com