கே.சி. வேணுகோபால் பேட்டி: ஆட்சியில் பங்கு என்பது கட்சியின் நிலைப்பாடு அல்ல என காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
சென்னை முகப்பேரில் நடைபெற்ற மாவட்டத் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசினால் நடவடிக்கை எடுக்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கூட்டத்திற்கு பிறகு மாநில தலைவர் செல்வப்பெருந்தகையுடன் இணைந்து கே.சி. வேணுகோபால் செய்தியாளர்களுடன் பேசியதாவது:
''நாங்களும் ஒரு அரசியல் கட்சிதான். எங்களுக்கு லட்சியங்கள் உள்ளன. பொதுவெளிகளில் கூட்டணி குறித்து கூறப்படும் கருத்துகள் அவர்களின் தனிப்பட்ட கருத்துகள் மட்டுமே. அது கட்சியின் நிலைப்பாடு அல்ல.
கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ பேசக்கூடாது என காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளது. திமுகவிடம் எங்கள் நிலைப்பாடு குறித்து எடுத்துக் கூறி இறுதி முடிவு எடுக்கப்படும்'' எனக் குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டில் தவெக உடன் கூட்டணியா? என்ற கேள்விக்கு பதில் அளித்த கே.சி. வேணுகோபால், ''உங்கள் யூகங்களுக்கு பதில் அளிக்க முடியாது'' எனக் குறிப்பிட்டார்.
Summary
Participation in government is not the partys position K.C. Venugopal
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

”எளிய மக்களுடன் அரசு இல்லை!” Congress MP கே.சி. வேணுகோபால்

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

புதுச்சேரியில் இரட்டை என்ஜின் ஆட்சியால் எந்தப் பலனும் இல்லை: கே.சி. வேணுகோபால்

புதுச்சேரியில் காங்கிரஸ் பாத யாத்திரை இன்று நிறைவு: கே.சி.வேணுகோபால் பங்கேற்பு
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


