தமிழகத்தில் வியாழக்கிழமை (பிப்.19) முதல் ரமலான் நோன்பு தொடங்குவதாக தமிழக அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளாா்.
இதுகுறித்து அரசு தலைமை காஜி அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புனித ரமலான் மாதத்துக்கான முதல் பிறை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை (பிப்.18) மாலை தென்பட்டது. இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை (பிப்.19) முதல் புனித ரமலான் மாதத்தின் முதல் நோன்பு தொடங்குவதாக தமிழக அரசு தலைமை காஜி முஃப்தி என்.பி. உஸ்மான் முஹியித்தின் அதிகாரப்பூா்வமாக அறிவித்துள்ளாா்.
மேலும், புதன்கிழமை இரவு முதல் பள்ளிவாசல்களில் புனித தராவீஹ் தொழுகைகள் நடைபெறும். இறை அருளுமும், அமைதியும் சூழும் இந்த ரமலான் மாதத்தில் அனைவரும் நோன்பு நோற்று, நற்செயல்களில் ஈடுபட்டு அல்லாஹ்வின் அருளைப் பெற வேண்டுகிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

திருவள்ளூரில் ரமலான் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை!

அப்பம்பட்டில் ரமலான் நோன்பு துறப்பு நிகழ்ச்சி

ரமலான் நோன்பு திறப்பு விழா

ரமலான் நோன்பு தொடங்கியது!
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


