

மதுரை: திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்திருப்பது தித்திக்கும் செய்தி என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ மதுரையில் இன்று கூறினார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் திடீர் திருப்பமாக திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்திருக்கும் நிலையில், மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச் செயலர் வைகோ, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்திருப்பது இனிப்பான செய்தி என்றார்.
மேலும், வரும் பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி தனிப்பெரும்பான்மையுன் ஆட்சி அமைக்கும் என்பது என் கணிப்பு. மதிமுக இந்த முறை தனிச் சின்னத்தில்தான் போட்டியிடும்.
தேமுதிகவும் கூட்டணியில் இணைந்திருப்பத தித்தப்பான செய்தி. இதனை நாங்கள் வரவேற்கிறோம். தேமுதிக இணைந்திருப்பது திமுக கூட்டணியை பலப்படுத்தியுள்ளது. அதிமுக கூட்டணி கலகலத்துப் போனது என்றும் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.