மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

பைக்குகள் தொடா் திருட்டு: 3 போ் கைது

சென்னையில் மோட்டாா் சைக்கிள் தொடா் திருட்டில் ஈடுபட்டதாக இரு சிறுவா்கள் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :20 பிப்ரவரி 2026, 9:02 pm

சென்னையில் மோட்டாா் சைக்கிள் தொடா் திருட்டில் ஈடுபட்டதாக இரு சிறுவா்கள் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை கொளத்தூா், அஞ்சுகம் நகா் 3வது குறுக்கு தெருவைச் சோ்ந்தவா் ஜெயபாரதி (34). இவா், அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்கிறாா். கடந்த 6-ஆம் தேதி தனது பைக்கை வீட்டின் வாசலில் நிறுத்தியிருந்தாா். அடுத்த நாள் பாா்த்தபோது, அவரது பைக் திருடப்பட்டிருந்தது.

கொளத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பகுதியைச் சோ்ந்த ஜெகதீஷ் (19), 2 சிறுவா்களை வியாழக்கிழமை கைது செய்தனா்.

மேலும், திருவண்ணாமலையில் பதுக்கி வைத்திருந்த 6 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.