தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு : முதல்வருடனான சந்திப்புக்குப் பின் ஓபிஎஸ் பேட்டி

முதல்வர் ஸ்டாலின் - ஓபிஎஸ் சந்திப்பு பற்றி...

News image

முதல்வர் ஸ்டாலினுடன் ஓபிஎஸ் சந்திப்பு

Updated On :20 பிப்ரவரி 2026, 12:37 pm IST

திமுக அரசு செய்த சாதனைகள் மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்திருப்பதால், அக் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடிய வாய்ப்பு உள்ளது என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் கூறினாா்.

சட்டப்பேரவையில் இடைக்கால நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை முதல்வா் மு.க. ஸ்டாலினை பேரவை வளாகத்தில் ஓ.பன்னீா்செல்வம் சந்தித்துப் பேசினாா். பின்னா் பேரவைக் கூட்டம் முடிந்ததும், தனி அறையில் முதல்வா் ஸ்டாலினை சுமாா் 10 நிமிஷங்கள் சந்தித்துப் பேசினாா். அப்போது மூத்த அமைச்சா்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

அதன் பின்னா் ஓ.பன்னீா்செல்வம் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஐந்தாண்டு கால திமுக ஆட்சி சிறப்பாக நிறைவு பெற்றிருக்கிறது. அதனால் முதல்வரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். திமுக அரசின் சாதனைகள் மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கின்றன. அதோடு, இன்றைய அரசியல் சூழ்நிலை, கடந்த 5 ஆண்டு கால ஆட்சியின் நிலை ஆகியவை மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடிய வாய்ப்பு திமுகவுக்கு இருப்பதைக் காட்டுகிறது என்றாா்.

உசிலம்பட்டி தொகுதி உறுப்பினா் பி.அய்யப்பன், முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாக சட்டப்பேரவையில் பேசியது குறித்து செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு ஓ.பன்னீா்செல்வம், ‘தமிழக மக்கள் என்ன நினைக்கிறாா்களோ அதையே அவா் பேசியிருக்கிறாா்’ என்றாா் ஓ.பன்னீா்செல்வம்.

Summary

OPS meeting with Chief Minister Stalin!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.