மத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

மிசாவா? தடாவா? உயிரே போனாலும்... மதுரை மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

உயிரே போனாலும் தமிழ்நாட்டின் கோரிக்கைகளுக்கு குரல் கொடுப்போம் என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளதைப் பற்றி...

News image

முதல்வர் ஸ்டாலின்.

Updated On :21 பிப்ரவரி 2026, 6:53 pm IST

உயிரே போனாலும் தமிழ்நாட்டின் கோரிக்கைகளுக்கு குரல் கொடுப்போம் என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

மதுரை உத்தங்குடியில் இன்று (பிப். 21) நடைபெறும் தெற்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ஐ. பெரியசாமி, பி. மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த மகளிர் உரிமைத் தொகையை மத்திய அரசு நிறுத்தப் பார்த்தது. ஆனால், காலையிலேயே ரூ. 5,000 என்ற ஆச்சரியம் கொடுத்ததுமே மத்திய அரசுக்குப் பயந்து மக்கள் உடனே வங்கிக்குச் சென்று தங்கள் பணத்தை எடுத்துக் கொண்டனர்.

மக்களுக்காக கொடுத்தால் அது திமுக. ஆனால், மக்களிடம் இருந்து எடுத்துக் கொண்டால் அது மத்திய அரசு. நமது மாநிலம் வரலாறு காணாத வளர்ச்சி அடைத்திருக்கிறது. அது எதிரிகளின் கண்ணை உறுத்துகிறது. வாக்காளர்களை கனிவாக பணிவாக நடத்த வேண்டும். மக்கள்தான் எஜமானர்கள்; நாம் சேவகர்கள்.

பழனிசாமி போல நாங்கள் கோழைகள் அல்ல; ஆட்சியல்ல, பதவியல்ல.. உயிரே போனாலும் கவலைப்படாமல் தமிழ்நாட்டின் கோரிக்கைகளுக்கு குரல் கொடுப்போம். வழக்குப் போடுவியா போடு... நாங்கள் பார்க்காத மிசாவா? தடாவா?” எனப் பேசினார் முதல்வர் ஸ்டாலின்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.