மதுரை வைகையில் புதிய மேம்பாலம்! முதல்வர் திறப்பு!

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மேம்பாலத்தை திறந்து வைத்த முதல்வர்.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மேம்பாலத்தில் பயணிக்கும் முதல்வர் ஸ்டாலின்.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மேம்பாலத்தில் பயணிக்கும் முதல்வர் ஸ்டாலின்.படம்: DIPR
Updated on
1 min read

மதுரை தமுக்கம் திடல் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரை கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தை இன்று(பிப். 21) முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

முன்னதாக, இந்தப் பாலத்துக்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மேம்பாலம் என முதல்வர் ஸ்டாலின் பெயர் சூட்டிய நிலையில், இன்று திறக்கப்பட்டது.

இந்தப் பாலம் 61 தூண்கள், 62 கண்களுடன் கிட்டத்தட்ட 2 கி.மீ. நீளத்தில் கட்டப்பட்டுள்ளது. பாலத்தின் ஏறுதளம் தமுக்கம் பகுதியில் தொடங்கி நெல்பேட்டை அண்ணாசிலை சந்திப்பில் இறங்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

ரூ.213 கோடியில் கட்டப்பட்டுள்ள இந்தப் புதிய பாலத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இதையடுத்து, சிவகங்கையில் புதிதாக அமைக்கப்பட்ட மருது சகோதரர்களின் உருவச் சிலைகளை காணொலி வாயிலாக முதல்வர் திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, மதுரை ஸ்ரீமீனாட்சி அரசு மகளிர் கல்லூரியில் மேம்படுத்தப்பட்ட கணினி ஆய்வகத்தைத் தொடங்கிவைக்கிறார்.

பிறகு, அங்கிருந்து வண்டியூர் புறப்படும் முதல்வர், சீரமைக்கப்பட்ட வண்டியூர் கண்மாய் பூங்கா, ஆங்குரன் அறிவியல் மையம், பேரூராட்சிகளின் புதிய அலுவலகக் கட்டடம், 867 ஊரகக் குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம் ஆகியவற்றை மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

Summary

Chief Minister Stalin inaugurated the new bridge constructed from Madurai Tamukkam Thidal to Nelpettai Anna Statue today (Feb. 21).

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மேம்பாலத்தில் பயணிக்கும் முதல்வர் ஸ்டாலின்.
மதுரையில் முதல்வர் ஸ்டாலின்! தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com