பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

நாளை நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலா

பசும்பொன்னில் நாளை நல்ல முடிவை அறிவிக்கிறேன் என சசிகலா தெரிவித்துள்ளது குறித்து...

News image

சசிகலா

கோப்புப் படம்

Updated On :23 பிப்ரவரி 2026, 3:06 pm

இணையதளச் செய்திப் பிரிவு

பசும்பொன்னில் நாளை நல்ல முடிவை அறிவிக்கிறேன் என சசிகலா தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர்களான அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடங்களில் சசிகலா இன்று (பிப். 23) மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது:

பசும்பொன்னில் அம்மா பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறேன். அதில் சில முக்கிய முடிவுகள் எடுக்க இருக்கிறோம். நாளை அனைவரும் கலந்துகொள்ள வேண்டும். நாளை நடைபெறும் கூடத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும். நாளை நல்ல முடிவை அறிவிக்கிறேன் எனக் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஏப்ரலில் வாக்குப்பதிவுக்கான தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்களை ஒருங்கிணைக்கும் பணிகளை சசிகலா மேற்கொண்டு வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக, டிடிவி தினகரனைப் போன்று புதிய அரசியல் கட்சித் தொடங்குவார் எனக் கூறப்படுகிறது. இதனிடையே நாளை நல்ல முடிவை அறிவிக்கிறேன் என சசிகலா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.