நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

திராவிடக் கட்சிகளோடு கூட்டணி; பிப். 28ல் அறிவிப்பு! - ராமதாஸ்

பிப். 28 ஆம் தேதி கூட்டணி குறித்து ராமதாஸ் அறிவிப்பு...

News image

ராமதாஸ் - கோப்புப் படம்

Updated On :26 பிப்ரவரி 2026, 11:55 am IST

திராவிடக் கட்சிகளோடு கூட்டணி இருக்கும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ளதையொட்டி கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

பாமகவின் ராமதாஸ் தரப்பு இன்னும் கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடவில்லை.

இந்நிலையில் தைலாபுரத்தில் செய்தியாளர்களுடன் பேசும்போது. 'திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இருக்குமா?' என்ற செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த ராமதாஸ், "இருக்கும்" என்று பதிலளித்தார்.

மேலும் அவர் பேசுகையில், "கூட்டணி குறித்து இன்றே முடிவு செய்ய முடியாது. ஏனென்றால் அதற்கான களம் சரியாக அமையவில்லை. அதனால் நேரம் வரும்போது கூட்டணி குறித்து அறிவிப்பேன். நமக்கான தேர்தல் வாகனம் தயாராகிவிட்டது. வருகிற பிப். 28 ஆம் தேதி கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடுவேன்" என்றும் கூறியுள்ளார்.

Summary

Alliance possible with Dravidian parties; Announcement on Feb. 28: Ramadoss

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.