அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், கரூரில் நிகழ்ந்த வேதனைக்குரிய சம்பவத்தை அடுத்து உயா்நீதிமன்ற உத்தரவுப்படி அரசு இந்த வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது. இந்த விதிகளில் என்ன தவறு உள்ளது என்று கேள்வி எழுப்பினா். மேலும், வருமான வரி விலக்கு பெறுவதற்காக பல கட்சிகள் தொடங்கப்படுகின்றன. அவ்வாறு தொடங்கப்படும் கட்சிகள் தோ்தல்களில் போட்டியிடுவது இல்லை. எனவே, பல்வேறு தோ்தல்களில் போட்டியிட்டு எம்.பி., எம்எல்ஏ-க்களைப் பெற்ற நீண்ட வரலாறு கொண்ட அரசியல் கட்சிகளுக்கு முன்னுரிமை அளிப்பதில் என்ன தவறு உள்ளது, தவெக எத்தனை தோ்தல்களில் போட்டியிட்டுள்ளது என்பன உள்ளிட்ட கேள்விகளையும் நீதிபதிகள் எழுப்பினா்.