வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் புகைப்படங்கள் இடம்பெறும்! - ஞானேஷ்குமார்

சென்னையில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பேட்டி

News image
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார்
Updated On :27 பிப்ரவரி 2026, 8:29 am

இணையதளச் செய்திப் பிரிவு

வரும் தேர்தல்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் வண்ணப் புகைப்படங்களும் இடம்பெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தெரிவித்தார்.

சென்னை தனியார் ஹோட்டலில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் செய்தியாளர்களுடன் பேசினார்.

"தமிழ்நாட்டில் 5.67 வாக்காளர்கள் உள்ளனர். 18 - 19 வயதுடைய 12.5 லட்சம் பேரும் 20 -29 வயதுடைய 1.05 லட்சம் பேரும் உள்ளனர்.

தமிழகத்தில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள்(எஸ்ஐஆர்) பணிகள் நாட்டுக்கே முன்னுதாரணமாக உள்ளன. எஸ்ஐஆர் பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு நன்றி. ஜனநாயகத்தைக் காப்பதில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.

தமிழ்நாட்டில் 75 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. வாக்காளர் பட்டியல் என்பது நேர்மையான தேர்தலின் அடிப்படை

தமிழகத்தில் வரும் பேரவைத் தேர்தலில் தேர்தல் அதிகாரிகள் அச்சமின்றி செயல்படலாம். சமூக ஊடங்கங்களில் பொய் செய்திகள் கண்காணிக்கப்படும்.

வாக்குபதிவின்போது 2 மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு சதவீதம் பதிவேற்றம் செய்யப்படும். வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் வண்ணப் புகைப்படங்கள் இடம்பெறும். சாமானிய மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் மக்கள் வாக்களிக்கும் முறை எளிமையாக்கப்படும்.

வாக்குச்சாவடிகளில் குடிநீர், கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும்.

தற்போது வரை எஸ்ஐஆர் பணிகளில் 267 புகார்கள் மட்டுமே வந்துள்ளன" என்று கூறினார்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்!

செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்த அவர்,

"தகுதியான ஒருவர் எப்போது வேண்டுமானாலும் வாக்காளர் பட்டியலில் தனது பெயரைச் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.

இப்போது இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான நிலையிலும், அதில் பெயர் இடம்பெறவில்லை என்றால் தகுதியுள்ள ஒருவர் படிவம் 6 மூலமாக தங்கள் பெயரைச் சேர்க்கலாம். படிவம் 7 மூலமாக பெயர் நீக்கம் செய்யலாம், படிவம் 8 மூலமாக இட மாற்றத்திற்கு, தொகுதி மாற்றத்திற்கு விண்ணப்பிக்கலாம். வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு 10 நாள்களுக்கு முன்வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். நீங்கள் விண்ணப்பித்து 7 முதல் 10 நாள்களுக்குள் சரிசெய்யப்படும்" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.