வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

புலனாய்வு அமைப்புகளின் நேர்மையை பாஜக அரசு அடகு வைக்கக் கூடாது! - மு.க. ஸ்டாலின்

கேஜரிவால் உள்ளிட்டோர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவு...

News image
கோப்புப் படம் - library
Updated On :27 பிப்ரவரி 2026, 8:44 am

இணையதளச் செய்திப் பிரிவு

அரசியலுக்காக புலனாய்வு அமைப்புகளின் நேர்மையை மத்திய பாஜக அரசு அடகு வைக்கக் கூடாது என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐயால் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்பட 23 பேரையும் இன்று தில்லி நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டுள்ளது.

சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் எந்த ஆதாரங்களும் இல்லை என்றும் ஆதாரங்களே இல்லாமல் சிபிஐயால் ஜோடிக்கப்பட்ட வழக்கு இது என்றும் நீதிமன்றம் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

மேலும், குற்றம்சாட்டப்பட்ட 23 பேருக்கு எதிராக எவ்வித நடவடிக்கையையும் எடுக்கக் கூடாது என்றும் வழக்கில் சாட்சியமோ, ஆதாரங்களோ இல்லாமல் நூற்றுக்கணக்கான பக்கங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த சிபிஐ அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கேஜரிவால் கதறி அழுதார். 'உண்மை வென்றது' எனவும் மோடியும் அமித் ஷாவும் தீட்டிய சதித்திட்டம் என்றும் குற்றம்சாட்டினார்.

கேஜரிவால் உள்ளிட்டோர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,

"குறுகிய கால அரசியலுக்காக மத்திய பாஜக அரசு, புலனாய்வு அமைப்புகளின் நேர்மையை அடகு வைக்கக் கூடாது. கொஞ்சம் வெட்கப்படுங்கள்.

இவை அனைத்திலும் உறுதியாக நின்று உண்மை வெளிப்பட வழிவகுத்ததற்கு நண்பர் அரவிந்த் கேஜரிவால் மற்றும் மணீஷ் சிசோடியாவுக்கு வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.

முதல்வரின் பதிவுக்கு அரவிந்த் கேஜரிவாலும் மணீஷ் சிசோடியாவும் நன்றி தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.