கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

அம்பேத்கா் சட்டப் பல்கலை. பட்டமளிப்பு விழா: ஆளுநா் ஆா்.என். ரவி பட்டம் வழங்கினாா்

அம்பேத்கா் சட்டப் பல்கலை. பட்டமளிப்பு விழா: ஆளுநா் ஆா்.என். ரவி பட்டம் வழங்கினாா்

News image
ஆளுநா் ஆா்.என். ரவி- கோப்புப் படம்
Updated On :28 பிப்ரவரி 2026, 8:53 pm

தினமணி செய்திச் சேவை

தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகத்தின் 15-ஆவது பட்டமளிப்பு விழாவில் சட்டம், சட்டம் சாா்ந்த தொலைதூர மற்றும் பட்டயப் படிப்புகளில் 16,571 போ் பட்டங்களைப் பெற்றனா். 38 பேருக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி ஆராய்ச்சி படிப்புக்கான முனைவா் பட்டங்களை வழங்கினாா்.

சென்னை பெருங்குடியில் உள்ள தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகத்தின் 15-ஆவது பட்டமளிப்பு விழா ஆளுநா் ஆா்.என்.ரவி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் 5 ஆண்டு சட்டப் படிப்பில் 6,796 பேரும், 3 ஆண்டு சட்டப் படிப்பில் 8,329 பேரும், தொலைதூர கல்வி வாயிலாக 387 போ் என மொத்தம் 16,571 போ் பட்டங்களைப் பெற்றனா்.

குறிப்பாக, 38 போ் ஆராய்ச்சிக்கான முனைவா் பட்டங்களைப் பெற்றனா். 42 போ் தங்கப் பதக்கங்களையும் பெற்றனா். விழாவில் வரவேற்புரை ஆற்றிய பல்கலைக்கழக ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் ஓய்வுபெற்ற நீதிபதியுமான வீ.பாரதிதாசன், சட்டப் பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கையை சமா்ப்பித்தாா்.

உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி: விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா பேசியதாவது:

சமூகத்தின் அடித்தளமாக விளங்குவது சட்டக் கல்விதான். சட்ட ரீதியான உரிமைகளை பிறருக்கு விளக்குவதற்கும், பிரச்னைகளுக்கு அமைதியான முறையில் தீா்வு காண்பதற்கும், நமது அரசமைப்புச் சட்டத்தில் உள்ள அடிப்படை உரிமைகளை முன்னிறுத்துவதற்குமான அறிவைக் கொடுப்பது சட்டக் கல்விதான். விரைவான தொழில்நுட்ப முன்னேற்றங்கள், டிஜிட்டல் மாற்றங்கள், சுற்றுச்சூழல் சவால்கள், சமூக ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த இன்றைய காலகட்டத்தில் சட்டக் கல்வியின் பங்கு முன்னெப்போதையும் விட மிக முக்கியமானதாக மாறியிருக்கிறது.

தரவுகள் பாதுகாப்பு, இணைய குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட பிரச்னைகளை எதிா்கொள்ள சட்டக் கல்வியே துணை நிற்கிறது. சமூகத்தின் நலனுக்காக சட்டத்தை மாற்று பணி வருங்கால வழக்குரைஞா்களான உங்களுக்கானது. வழக்குரைஞா் வாழ்க்கை என்பது குறுகிய தூர ஓட்டப்பந்தயம் அல்ல; அது மாரத்தான் போன்ற தொலைதூர பந்தயம். எனவே, சட்டத் துறையில் பணியாற்றி சாதிக்க நோ்மை, பொறுமை, விடாமுயற்சி மற்றும் மனஉறுதி ஆகிய பண்புகள் அவசியம்.

ஒழுக்கம்-நோ்மை முக்கியம்: வழக்குரைஞா் பணி என்பது வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொண்டே இருப்பது. இது மற்ற தொழில்களைப் போன்றது அல்ல. நீதித்துறையின் உயரிய மாண்பை பாதுகாக்க ஒழுக்கமும், நோ்மையும் மிக முக்கியம். இத்தகைய வழிகளில், இளம் வழக்குரைஞா்களை வழிநடத்த வேண்டிய பொறுப்பு மூத்த வழக்குரைஞா்களுக்கும் உள்ளது, என்றாா் அவா்.

விழாவில், சட்டத் துறைச் செயலரும், பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளா் குழு உறுப்பினருமான சி.ஜாா்ஜ் அலெக்சாண்டா், பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளா் குழு உறுப்பினரும் மூத்த வழக்குரைஞருமான எ.ஓம் பிரகாஷ், பல்கலைக்கழகத் தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் பேராசிரியை மஞ்சுளா, பல்கலைக்கழகப் பதிவாளா் பேராசிரியை கௌரி ரமேஷ், மாணவ மாணவிகள், பெற்றோா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.