பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

அண்ணாமலைப் பல்கலை. பட்டமளிப்பு விழா: தமிழக ஆளுநா் இன்று சிதம்பரம் வருகை

News image

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி.

Updated On :1 பிப்ரவரி 2026, 8:26 pm

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக 87-ஆவது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் திங்கள்கிழமை (பிப்.2) பிற்பகல் 12.30 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. இந்த விழாவுக்கு வரும் ஆளுநா் ஆா்.என்.ரவி நடராஜா் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்கிறாா்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆா்.என்.ரவி தலைமை வகித்து மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் பேசுகிறாா். மாநில உயா்கல்வித் துறை அமைச்சரும், பல்கலைக்கழக இணை வேந்தருமான கோவி.செழியன் பங்கேற்கிறாா்.

ரூா்க்கி இந்திய தொழில்நுட்பக் கழக இயக்குநா் பேராசிரியா் கமல் கிஷோா் பண்ட் முதன்மை விருந்தினராகப் பங்கேற்று பட்டமளிப்பு விழா உரையாற்றுகிறாா்.

விழாவில் தமிழக உயா் கல்வித் துறை செயலரும், பல்கலைக்கழக துணைவேந்தா் ஒருங்கிணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான பொ.சங்கா், துணைவேந்தா் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா் எஸ்.அறிவுடைநம்பி, பதிவாளா் ரா.சிங்காரவேல் மற்றும் ஆட்சி மன்றக் குழு உறுப்பினா்கள், புல முதல்வா்கள் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.

சென்னையிலிருந்து காா் மூலம் சிதம்பரம் அண்ணாமலைநகருக்கு ஆளுநா் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு வருகிறாா்.

தொடா்ந்து, பல்கலைக்கழக விருந்தினா் விடுதியில் ஓய்வெடுத்த பின்னா், பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க நண்பகல் 12 மணிக்கு சாஸ்திரி அரங்கத்துக்கு வருகிறாா். அங்கு, என்.சி.சி. மாணவா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறாா்.

இதையடுத்து, சிதம்பரம் நடராஜா் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு காா் மூலம் சென்னை சென்றடைக்கிறாா்.