ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

நீலகிரி: கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த புலம்பெயர் தொழிலாளிகள் மூவர் பலி

நீலகிரியில் கிணறு வெட்டும் பணியின்போது, மண் சரிந்ததில் மேற்கு வங்கத்தை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி

News image

சித்திரிப்புப் படம் - ENS

Updated On :17 ஜனவரி 2026, 7:49 pm IST

நீலகிரியில் கட்டுமானப் பணியில் மண் சரிந்ததில் புலம்பெயர் தொழிலாளிகள் 3 பேர் பலியாகினர்.

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே ஜெகதளா பேரூராட்சியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் கிணறு வெட்டும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பணியில் மேற்கு வங்கத்தை சேர்ந்த ரஹ்மான், நசீர், உஸ்மான் என்ற 3 இளைஞர்கள் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில், பணியின்போது மண் சரிந்து இளைஞர்கள் மீது விழுந்ததில் மண்ணுக்குள் மூவரும் புதையுண்டதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, மண் சரிவில் சிக்கிய மூவரையும் மீட்புப் படையினர் மீட்டு, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இருப்பினும், இளைஞர்கள் மூவரும் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.

Summary

3 workers from West Bengal killed at construction site in Nilgiris district

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.