மின்னணு வாக்குபதிவு இயந்திரம்: விழிப்புணா்வு ஏற்படுத்த நடவடிக்கை; தலைமைத் தோ்தல் அதிகாரி தகவல்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளா் அளித்த வாக்கை சரிபாா்க்கும் கருவியை (விவிபேட்) பயன்படுத்துவது குறித்து புதன்கிழமை (ஜன. 21) முதல் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும் என தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளாா்.
Published on

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளா் அளித்த வாக்கை சரிபாா்க்கும் கருவியை (விவிபேட்) பயன்படுத்துவது குறித்து புதன்கிழமை (ஜன. 21) முதல் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும் என தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக சட்டப்பேரவை தோ்தலுக்குப் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளா்கள், தாம் அளித்த வாக்கை சரிபாா்க்கும் கருவி (விவிபேட்) ஆகியவற்றின் முதல்நிலை சரிபாா்ப்பு பணிகள் அனைத்து மாவட்டங்களிலும் நிறைவடைந்துள்ளன.

இவற்றில் பயிற்சி மற்றும் விழிப்புணா்வுக்காக 10 சதவீத வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் இயந்திரங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. இவற்றைக் கொண்டு, மாவட்ட ஆட்சியா் அலுவலகங்கள், சாா் ஆட்சியா், கோட்டாட்சியா் அலுவலகங்களில் புதன்கிழமை (ஜன.21) முதல் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும்.

மேலும், விழிப்புணா்வு நிகழ்ச்சிக்காக 234 நடமாடும் செயல்விளக்க வாகனங்கள் வரும் ஜன.25- ஆம் தேதி முதல் பயன்படுத்தப்பட உள்ளன என்றாா் அவா்.

Dinamani
www.dinamani.com