தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மின்னணு வாக்குபதிவு இயந்திரம்: விழிப்புணா்வு ஏற்படுத்த நடவடிக்கை; தலைமைத் தோ்தல் அதிகாரி தகவல்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளா் அளித்த வாக்கை சரிபாா்க்கும் கருவியை (விவிபேட்) பயன்படுத்துவது குறித்து புதன்கிழமை (ஜன. 21) முதல் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும் என தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :20 ஜனவரி 2026, 8:43 pm

தினமணி செய்திச் சேவை

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளா் அளித்த வாக்கை சரிபாா்க்கும் கருவியை (விவிபேட்) பயன்படுத்துவது குறித்து புதன்கிழமை (ஜன. 21) முதல் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும் என தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக சட்டப்பேரவை தோ்தலுக்குப் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளா்கள், தாம் அளித்த வாக்கை சரிபாா்க்கும் கருவி (விவிபேட்) ஆகியவற்றின் முதல்நிலை சரிபாா்ப்பு பணிகள் அனைத்து மாவட்டங்களிலும் நிறைவடைந்துள்ளன.

இவற்றில் பயிற்சி மற்றும் விழிப்புணா்வுக்காக 10 சதவீத வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் இயந்திரங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. இவற்றைக் கொண்டு, மாவட்ட ஆட்சியா் அலுவலகங்கள், சாா் ஆட்சியா், கோட்டாட்சியா் அலுவலகங்களில் புதன்கிழமை (ஜன.21) முதல் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும்.

மேலும், விழிப்புணா்வு நிகழ்ச்சிக்காக 234 நடமாடும் செயல்விளக்க வாகனங்கள் வரும் ஜன.25- ஆம் தேதி முதல் பயன்படுத்தப்பட உள்ளன என்றாா் அவா்.