விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

குடியரசு நாளை முன்னிட்டு 1 லிட்டர் பெட்ரோல் ரூ. 50-க்கு விற்பனை!

1 லிட்டர் பெட்ரோல் ரூ. 50-க்கு விற்பனை குறித்து...

News image

கோப்புப்படம்

Updated On :26 ஜனவரி 2026, 7:02 am

ஆடுதுறையில் குடியரசு நாளை முன்னிட்டு 1 லிட்டர் பெட்ரோல் ரூ. 50-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேவுள்ள ஆடுதுறையில் குடியரசு நாளை முன்னிட்டு இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் மோகனசுந்தரம், குடியரசு நாளான இன்று(ஜன. 26) காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் வரும் அனைவருக்கும் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 50க்கு போடப்படும் என்ற தெரிவித்திருந்தார்.

அதுபோல், இன்று காலை 9.30 மணிக்கு 500க்கும் மேற்பட்ட மக்கள், இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து நீண்ட வரிசையில் நின்று பெட்ரோலை நிரப்பி சென்றனர்.

இதனைத் தொடர்ந்து அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

இதனால், அப்பகுதியில் சிறுதுநேரம் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து, காவல் துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

Summary

To mark Republic Day, one liter of petrol is being sold.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.