பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக

கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பணி ஆணை வழங்கப்பட்டிருப்பது லஞ்சம்தான் என நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

Vijay | Nainar Nagenthran

விஜய் | நயினார் நாகேந்திரன் - கோப்புப் படம்

Published On :10 ஜூலை 2026, 6:36 pm IST

கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி ஆணை வழங்கப்பட்டிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரும் 36 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களில் தற்போது 31 பேருக்கு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கோவையில் செய்தியாளர்கள் சந்திப்பில் நயினார் நாகேந்திரன் பேசியதாவது, "கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு முதல்வர் விஜய் அரசுப் பணி ஆணை வழங்கியுள்ளார். நானும் அதற்கு வரவேற்பளித்தேன்.

இதனைப்போல சாலை விபத்தில் உயிரிழந்தோர், மின்சாரத் துறையில் வாரிசு அடிப்படையில் பலருக்கு வேலைவாய்ப்பு கொடுக்க வேண்டியுள்ளது, போக்குவரத்துத் துறையிலும் நிறைய பேருக்கு வேலைவாய்ப்பு கொடுக்க வேண்டியுள்ளது, வருவாய் மற்றும் கூட்டுறவுத் துறையில் பணியாற்றியபோது உயிரிழந்தோரின் வாரிசுகள் என ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது.

குரூப் 1, டெட் போன்ற தேர்வுகளுக்காகப் படித்து, கடினமாக உழைத்தவர்களுக்குக் கொடுக்கப்படவில்லை. இவர்களுக்கும் முன்னரே கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். கரூர் சம்பவம் தொடர்பாக அரசுப் பணி கொடுக்கப்பட்டதில் தவறில்லை.

இவர்களின் (தவெக) கூட்டத்தில் இறந்தவர்களுக்கு கொடுப்பதைப் பார்த்தால், இதில் சுயநலம் இருப்பது தெரிகிறது" என்று தெரிவித்தார்.

Summary

The issuance of appointment orders to the families of those who lost their lives in the Karur stampede amounts to bribery,says BJP Chief Nainar Nagenthran

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.