திரைப்படத்துக்கு கண்ணீர் வடிக்கும் ஆட்சியாளர்கள்! அருணாச்சலம் குடும்பத்துக்கு என்ன பதில்? உதயநிதி கண்டனம்தூத்துக்குடியில் காவல் மரணம்? காவல்துறை விளக்கம்!காரணம் கூறாமல் 3 மாதம் சிறை! தில்லியில் தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்! காசோலை மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை!தர்மேந்திர பிரதான் ராஜிநாமா வரை நாடாளுமன்றம் முடங்கும்! கார்கே திட்டவட்டம்50 ஆண்டுகள்! எம்ஜிஆருக்குப் பிறகு திரையரங்குகளில் ஹீரோவாக முதல்வர் விஜய்!தீவிரமடையும் போராட்டம்! மெரீனா மூடல்; மக்களுக்கு தடை!நீட் தேர்வை எதிர்த்து நாடாளுமன்றத்தில் திமுக தனியாகப் போராட்டம்! நாடாளுமன்றத்தில் இந்தியா - பாஜக கூட்டணிகள் எதிரெதிரே போராட்டம்!தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: மாணவர் கோரிக்கை நியாயமனது! - ராகுல் காந்திவிஜய் மீண்டும் படத்தில் நடிக்க வேண்டும் என ஆசை! அமைச்சர் வினோத்நீட் வழக்குகளை உடனடியாக விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள்! பிரதமர் மோடி
/

ஸ்டெம் செல் தானம்! உயிர் கொடுத்தவர் - உயிர்பெற்றவரின் உணர்வுப்பூர்வ சந்திப்பு!!

ஸ்டெம் செல் தானமளித்து உயிர் கொடுத்தவரும் உயிர்பெற்றவரும் உணர்வுப்பூர்வ சந்திப்பு நிகழ்ச்சி

News image

ஸ்டெம் செல் தானம் - IANS

Updated On :23 ஜூலை 2026, 2:51 pm IST

மிக அரிதான ரத்த மாறுபாடு நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவருக்கு, தன்னுடைய ஸ்டெம் செல் தானமளித்து உயிர் கொடுத்தவரை, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.

நாடு முழுவதும் ஸ்டெம் செல் தானம் அளிப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், நாடு முழுவதும் ஸ்டெம் செல் தானமளிக்க முன்வந்து பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதன் காரணமாகவும், மருத்துவர்கள் இந்த சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

சாம்னு ஜான் (40) என்ற இளைஞர், தனக்கு மறுவாழ்வு கொடுத்த ஸ்டெம்செல் தானமளித்த புது தில்லியைச் சேர்ந்த 25 வயதான பரிதோஷை சந்தித்தார். ஸ்டெம் செல் தானம் செய்வதற்கு முன்பதிவு செய்வதை பராமரித்து வரும் டிகேஎம்எஸ் அறக்கட்டளை மூலம் இந்த சந்திப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எலும்பு மஞ்சையானது நல்ல ஆரோக்கியமான ரத்த செல்களை உருவாக்குவதை நிறுத்தும் மிகத் தீவிரமான அப்ளாஸ்டிக் அமீனியா என்ற அரிதான நோயால் சாம்னு பாதிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர் கடந்த 2022ஆம் ஆண்டு சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவரது ரத்தத் தட்டுகள் அளவு அபாய அளவை விடவும் குறைந்திநரந்தது. 18 மாதங்கள் தேடுதலுக்குப் பிறகு, இவருக்கு பொருந்தும் ஸ்டெம் செல் தானமளிப்பவரான பரிதோஷ் கண்டுபிடிக்கப்பட்டு இவருக்கு ஸ்டெம் செல் மாற்றும் சிகிச்சை அளிக்ப்பட்டது.

ஸ்டெம் செல் தானம் கிடைத்ததால் எனக்கு மறுவாழ்வு கிடைத்திருக்கிறது என்று சாம்னு ஜான் கூறுகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.