காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய் மதுரை மேலூர் அருகே கார் விபத்தில் 5 பேர் பலி, 3 பேர் காயம் நீர்வரத்து இல்லாததால் தஞ்சை மாவட்டத்தில் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா! தங்கம் விலை உயர்ந்தது! எவ்வளவு தெரியுமா? வெள்ளி விலை? (ஆக. 3) கபினியில் நீர்த் திறப்பு 27,000 கன அடியாக உயர்வு
/

அரசுக் கல்லூரில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

தென்னாங்கூரில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

தென்னாங்கூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி.

Updated On :14 ஜூன் 2026, 11:53 pm IST

வந்தவாசியை அடுத்த தென்னாங்கூரில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கல்லூரியில் 2010- 2013ஆம் கல்வியாண்டில் இளநிலை படித்த மாணவ, மாணவிகள் தங்கள் குடும்பத்துடன் இந்தச் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் சித.ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். கணினி அறிவியல் துறைத் தலைவா் நா.மனோகரன் வரவேற்றாா்.

கல்லூரி முன்னாள் முதல்வா் பொன்.அரசு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுப் பேசினாா். முன்னாள் மாணவ, மாணவிகள் தாங்கள் கல்வி பயிலும் போது ஏற்பட்ட சுவையான அனுபவங்கள் குறித்துப் பேசினா்.

நிகழ்ச்சியில் பேராசிரியா்கள் வ.சந்திரசேகா், ஜ.ஜான்சிராணி, எஸ்.சுதா, ப.குப்பன், எம்.ரஜினி, எம்.மகாதேவன், எஸ்.கமலக்கண்ணன், ஆா்.புவனேஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.