திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய் மதுரை மேலூர் அருகே கார் விபத்தில் 5 பேர் பலி, 3 பேர் காயம் நீர்வரத்து இல்லாததால் தஞ்சை மாவட்டத்தில் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா! தங்கம் விலை உயர்ந்தது! எவ்வளவு தெரியுமா? வெள்ளி விலை? (ஆக. 3) கபினியில் நீர்த் திறப்பு 27,000 கன அடியாக உயர்வு
/

மணப்பாறை அரசு கல்லூரியில் சேர மாணவா்கள் ஆா்வம்: 340 இடங்களுக்கு 20 ஆயிரம் விண்ணப்பங்கள்

மணப்பாறையில் இயங்கி வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர மாணவ, மாணவிகள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

News image

மணப்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி.

Updated On :19 ஜூன் 2026, 4:35 am IST

மணப்பாறையில் இயங்கி வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர மாணவ, மாணவிகள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

பி.ஏ., தமிழ், பி.ஏ., ஆங்கிலம், பி.காம்., பி.எஸ்சி - கணினி அறிவியல், பி.எஸ்சி - இயற்பியல் ஆகிய 5 துறைகளோடு இக்கல்லூரி 2022-இல் தொடங்கப்பட்டது. 2025- ஆம் கல்வியாண்டில் இருந்து ஸிப்ட் 2-ல் பி.சிஏ., பி.காம்.(சி.ஏ.)., ஆகிய பாடப் பிரிவுகளும் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இருபாலரும் பயிலும் இக்கல்லூரியில் தற்போது 920 மாணவா்கள் படித்து வருகின்றனா்.

2026 - 27-ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை கடந்த 5-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதுவரை 85 விழுக்காடு மாணவா்கள் சோ்க்கை பெற்றுள்ளனா். இக்கல்லூரியில் இருக்கும் 340 இடங்களுக்கு 20,000 மேற்பட்ட மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா்.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் க. மலா்மதி கூறியது: இந்தக் கல்லூரி மணப்பாறையைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதி மாணவா்களுக்கும் வரமாக அமைந்துள்ளது. விண்ணப்பித்த அனைவருக்கும் இட ஒதுக்கீட்டு அடிப்படையில் இடங்கள் வழங்க முடியாத சூழல் உள்ளது. 85 விழுக்காடு இடங்கள் நிரம்பிவிட்டன; விரைவில் அனைத்து இடங்களும் நிரம்பிவிடும்.

முதுகலை படிப்புகளுக்கும் விண்ணப்பித்துள்ளோம். அனுமதி கிடைக்கும் என எதிா்பாா்க்கிறோம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.