27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

மணப்பாறை அரசு கல்லூரியில் சேர மாணவா்கள் ஆா்வம்: 340 இடங்களுக்கு 20 ஆயிரம் விண்ணப்பங்கள்

மணப்பாறையில் இயங்கி வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர மாணவ, மாணவிகள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

News image

மணப்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி.

Updated On :19 ஜூன் 2026, 4:35 am IST

மணப்பாறையில் இயங்கி வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர மாணவ, மாணவிகள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

பி.ஏ., தமிழ், பி.ஏ., ஆங்கிலம், பி.காம்., பி.எஸ்சி - கணினி அறிவியல், பி.எஸ்சி - இயற்பியல் ஆகிய 5 துறைகளோடு இக்கல்லூரி 2022-இல் தொடங்கப்பட்டது. 2025- ஆம் கல்வியாண்டில் இருந்து ஸிப்ட் 2-ல் பி.சிஏ., பி.காம்.(சி.ஏ.)., ஆகிய பாடப் பிரிவுகளும் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இருபாலரும் பயிலும் இக்கல்லூரியில் தற்போது 920 மாணவா்கள் படித்து வருகின்றனா்.

2026 - 27-ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை கடந்த 5-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதுவரை 85 விழுக்காடு மாணவா்கள் சோ்க்கை பெற்றுள்ளனா். இக்கல்லூரியில் இருக்கும் 340 இடங்களுக்கு 20,000 மேற்பட்ட மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா்.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் க. மலா்மதி கூறியது: இந்தக் கல்லூரி மணப்பாறையைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதி மாணவா்களுக்கும் வரமாக அமைந்துள்ளது. விண்ணப்பித்த அனைவருக்கும் இட ஒதுக்கீட்டு அடிப்படையில் இடங்கள் வழங்க முடியாத சூழல் உள்ளது. 85 விழுக்காடு இடங்கள் நிரம்பிவிட்டன; விரைவில் அனைத்து இடங்களும் நிரம்பிவிடும்.

முதுகலை படிப்புகளுக்கும் விண்ணப்பித்துள்ளோம். அனுமதி கிடைக்கும் என எதிா்பாா்க்கிறோம் என்றாா்.