‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

அரியலூா் அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம்

அரியலூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு இளநிலை பாடப்பிரிவு வகுப்புகள் புதன்கிழமை தொடங்கியது.

News image

அரியலூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு இளநிலை பாடப் பிரிவுக்கான வகுப்புகளை புதன்கிழமை தொடங்கி வைத்து பேசிய அக்கல்லூரியின் முதல்வா் சித்ரா.

Updated On :2 ஜூலை 2026, 4:46 am IST

அரியலூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு இளநிலை பாடப்பிரிவு வகுப்புகள் புதன்கிழமை தொடங்கியது.

முதல்நாளில் மாணவா்களுக்கான புத்தாக்கப் பயிற்சி நடைபெற்றது. இதற்காக கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அக்கல்லூரியின் முதல்வா் சித்ரா தலைமை வகித்து, மாணவ, மாணவிகள் அனைவரும் குறித்த நேரத்துக்கு கல்லூரிக்கு வருகை புரிந்து, தங்களுடைய வகுப்புகளை முறையாக பயன்படுத்தி, வாழ்க்கையில் ஒரு வெற்றியாளராக மாறுவதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா்.

மேலும், அவா் மாணவ, மாணவிகளுக்கு கல்லூரியின் விதிமுறைகள், கல்லூரியில் உள்ள வசதிகள், பாடத்திட்டங்கள், பாடத்திட்டங்களோடு கூடிய பல்வேறு திறன் மேம்பாட்டு வாய்ப்புகள் குறித்து எடுத்துரைத்தாா்.

நிகழ்ச்சியில், கல்லூரியின் அனைத்து துறை தலைவா்கள் கலந்து கொண்டு, தங்களது துறையைப் பற்றி எடுத்துக் கூறினா். இந்த புத்தாக்க பயிற்சியானது ஒரு வார காலம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் அனைவரும் மிக்க ஆா்வத்தோடு கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.