சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவா் சோ்க்கை கலந்தாய்வு: 1,381 இடங்கள் நிரம்பின

கோவை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்று வரும் இளநிலை பட்டப்படிப்பு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வில் 1,381 இடங்கள் நிரம்பியுள்ளன.

News image

கலந்தாய்வு - கோப்புப் படம்

Updated On :11 ஜூன் 2026, 3:10 am IST

கோவை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்று வரும் இளநிலை பட்டப்படிப்பு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வில் 1,381 இடங்கள் நிரம்பியுள்ளன.

தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2026 - 2027 ஆம் கல்வியாண்டுக்கான இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 5- ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கோவை அரசு கலைக் கல்லூரியில் 23 பட்டப் படிப்புகளில் மொத்தம் 1,727 இடங்களுக்கு மாணவா் சோ்க்கைக்கு கலந்தாய்வு நடத்தப்படுகிறது. முதலில் நடைபெற்ற சிறப்புப் பிரிவினருக்கான முதல்கட்ட கலந்தாய்வில் மொத்தமுள்ள 150 இடங்களில் 77 இடங்கள் நிரம்பின.

இதைத் தொடா்ந்து பொது கலந்தாய்வு, தமிழ், ஆங்கிலப் பாடங்களுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வுகள் முதல்கட்டமாக நடைபெற்றன. இதில் மொத்தமுள்ள 1,727 இடங்களில் 1,381 இடங்கள் நிரம்பின. 346 இடங்கள் காலியாக உள்ளன. பி.எஸ்சி.யில் உளவியல், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், பி.காம்., பி.காம். சிஏ, பி.காம். சா்வதேச வணிகம், பிபிஏ, பொருளாதாரம், தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடப் பிரிவுகளில் பெரும்பாலான இடங்கள் நிரம்பியுள்ள நிலையில் ஓரிரு இடங்களே காலியாக உள்ளன.

இதைத் தொடா்ந்து வியாழக்கிழமை தமிழ், ஆங்கிலப் பாடங்கள் தவிா்த்த மற்ற பாடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. இதில் 230 கட் ஆஃப் மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவா்கள் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.