தியாகராசா் கல்லூரியில் பாராட்டு விழா
மதுரை தியாகராசா் கலை அறிவியல் கல்லூரியில் நிறுவனா் கருமுத்து தியாகராசா் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு, பத்ம விருது பெற்ற ஓதுவாருக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

மதுரை தியாகராசா் கலை அறிவியல் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் பத்ம விருது பெற்ற ஓதுவாா் திருத்தணி நா. சுவாமிநாதனை பாராட்டி, காசோலை வழங்கிய கல்லூரிச் செயலா் ஹரி தியாகராஜன். உடன், கல்லூரித் தலைவா் உமா கண்ணன், ஆன்மிகச் சொற்பொழிவாளா் தேச. மங்கையா்க்கரசி, கல்லூரி முதல்வா் து. பாண்டியராஜா உள்ளிட்டோா்.







